செய்திகள்

கடலூரில் போலீஸ் ஏட்டுவை தாக்கி கொலை மிரட்டல்: வாலிபர் கைது

Published On 2016-10-21 12:04 GMT   |   Update On 2016-10-21 12:04 GMT
கடலூரில் போலீஸ் ஏட்டுவை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த வாலிபரை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடலூர்:

கடலூர் புதுநகர் போலீஸ் நிலையத்தில் ஏட்டாக பணிபுரிபவர் இளமாறன் (வயது 46). இன்று அதிகாலை கடலூர் வில்வநகரில் ரோந்துபணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது பகவதி அம்மன்கோவில் தெருவில் வாலிபர் ஒருவர் நின்றுகொண்டிருந்தார்.

சந்தேகமடைந்த இளமாறன் அந்த வாலிபரிடம் ஏன் வெகுநேரமாக இங்கு நிற்கிறாய் என்று கேட்டார். ஆத்திரமடைந்த வாலிபர் கீழே கிடந்த கல்லால் இளமாறனை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தார். இதில் அவருக்கு காயம் ஏற்பட்டது. பின்னர் அங்கிருந்து அந்த வாலிபர் தப்பி ஓடினார். உடனே இளமாறன் ஓடி சென்று அவரை பிடிக்க முயன்றார் ஆனால் முடியவில்லை.

இதுகுறித்து இளமாறன் கடலூர் புதுநகர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குபதிவு செய்து வாலிபரை தேடி வந்தனர். அப்போது கல்லால் தாக்கியவர் வில்வநகர் பகவதியம்மன்கோவில் தெருவை சேர்ந்த அருண்குமார் (23) என்பது தெரியவந்தது. உடனே அவரை கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.

Similar News