செய்திகள்

கிருஷ்ணகிரி அருகே சூதாட்டம்: 3 பேர் கைது

Published On 2016-10-18 11:30 GMT   |   Update On 2016-10-18 11:30 GMT
கிருஷ்ணகிரி அருகே சூதாடிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

கிருஷ்ணகிரி:

கிருஷ்ணகிரி டேம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சர்தார்உசேன் மற்றும் போலீசார் அவதானப்பட்டி பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அப்பகுதியில் உள்ள மறைவான இடத்தில் பணம் வைத்து சிலர் சூதாடிக் கொண்டிருந்த 3 நபர்களை போலீசார் சுற்றி வளைத்து பிடித்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் கிருஷ்ணகிரி பழையப்பேட்டை பகுதியை சேர்ந்த சங்கர்(26), இதாயத்(23), முனீர்பாஷா(41) என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் மூன்று பேர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

Similar News