செய்திகள்

மாமல்லபுரத்தில் கார்கள் மோதல்: 2 பேர் பலி

Published On 2016-10-16 15:39 IST   |   Update On 2016-10-16 15:39:00 IST
மாமல்லபுரத்தில் கார்கள் மோதலில் 2 பேர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மாமல்லபுரம்:

மணலியை அடுத்த சாத்தாங்காடை சேர்ந்தவர் ஜெய்சர்பாய் (வயது 65). பிராட்வேயில் ஹார்டு வேர்ஸ் கடை வைத்து இருந்தார்.

இன்று காலை அவர் ராயபுரத்தை சேர்ந்த உறவினர் மைசீத் அத்திமுடன் (26) காரில் பாண்டிச்சேரி நோக்கி சென்றார்.

மாமல்லபுரம், கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள தனியார் கல்லூரி அருகே சென்றபோது பாண்டிச்சேரியில் இருந்து சென்னை நோக்கி வந்த கார் மீது கெய்சர்பாய் சென்ற கார் மோதியது.

இதில் 2 கார்களும் நொறுங்கின. இடிபாடுகளில் சிக்கிய கெய்சர்பாய் சம்பவ இடத்திலேயே பலியானார். மைசீத்பாய் மற்றும் மற்றொரு காரில் இருந்த 4 பேரும் பலத்த காயம் அடைந்தனர்.

அக்கம் பக்கத்தினர் அவற்றை மீட்டு சோழிங்கநல்லூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் போகும் வழியிலேயே மைசீத்அத்தீம் பரிதாபமாக இறந்தார்.

மற்ற 4 பேருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர்களை பற்றிய விபரம் உடனடியாக தெரியவில்லை.

இந்த விபத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து மாமல்லபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Similar News