செய்திகள்

விருதுநகரில் மோட்டார் மெக்கானிக் தீக்குளித்து தற்கொலை

Published On 2016-10-14 09:54 GMT   |   Update On 2016-10-14 09:54 GMT
விருதுநகரில் மோட்டார் மெக்கானிக் உடலில் தீ வைத்து தற்கொலை செய்தார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறாரகள்.

விருதுநகர்:

விருதுநகர் கலைஞர் நகரை சேர்ந்தவர் மருதாசல மூர்த்தி (வயது42). இவருக்கு தனலட்சுமி என்ற மனைவியும், 3 குழந்தைகளும் உள்ளனர்.

விருதுநகர் பை-பாஸ் சாலையில் மோட்டார் வாகன வாட்டர் சர்வீஸ் நிறுவனத்தை மருதாசல மூர்த்தி நடத்தி வந்தார். நேற்று காலை அவர் வழக்கம்போல் பணிக்கு சென்றுள்ளார்.

இந்த நிலையில் மாலையில் நிறுவனத்தின் அருகே திடீரென தனது உடலில் டீசலை ஊற்றி அவர் தீ வைத்து கொண்டார். மருதாசல மூர்த்தி அலறல் சத்தம் எழுப்ப, அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்தனர்.

அவர்கள் தீயை அணைத்து மருதாசல மூர்த்தியை சிகிச்சைக்காக விருதுநகர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி இரவில் அவர் பரிதாபமாக இறந்தார். இது குறித்து விருதுநகர் மேற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மருதாசல மூர்த்தியின் தற்கொலைக்கு குடும்ப பிரச்சினை காரணமா? கடன் தொல்லையா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News