செய்திகள்

அரியலூரில் வடிகால்கள் தூர்வாரும் பணி தீவிரம்

Published On 2016-10-01 16:25 IST   |   Update On 2016-10-01 16:25:00 IST
அரியலூர் மாவட்டத்தில், மாவட்ட நிர்வாகத்தின் அறிவுரையின்படி அரியலூர் நகராட்சிக்குட்பட்ட செட்டி ஏரி மெயின் வரத்து வாய்க்கால், சித்தேரி வாய்க்கால் சுத்தம் செய்யும் பணி நடைபெற்று வருகிறது.

அரியலூர்:

அரியலூர் மாவட்டத்தில், மாவட்ட நிர்வாகத்தின் அறிவுரையின்படி அரியலூர் நகராட்சிக்குட்பட்ட செட்டி ஏரி மெயின் வரத்து வாய்க்கால், சித்தேரி வாய்க்கால் சுத்தம் செய்யும் பணி நடைபெற்று வருகிறது.

நகராட்சிக்குட்ப்பட்ட பகுதிகளில் உள்ள கருவேல மரங்கள் அகற்றப்பட்டு வருகின்றது. மேலும், மழைகால முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போர்க்கால அடிப்படையில் மழைநீர் வடிகால் அமைப்புகளை தூர்வாரும் பணிகள் மேற் கொள்ளப்பட்டு வருகிறது என அரியலூர் ஆணையர் (பொறுப்பு) சரஸ்வதி தெரிவித்துள்ளார்.

Similar News