செய்திகள்

மயிலாடுதுறையில் மாணவி தீக்குளித்து தற்கொலை

Published On 2016-09-20 13:38 IST   |   Update On 2016-09-20 13:38:00 IST
மயிலாடுதுறையில் பிளஸ்-1 மாணவி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். அவரை காப்பாற்ற சென்ற தாய் உடல் கருகியது.
மயிலாடுதுறை;

மயிலாடுதுறையில் பிளஸ்-1 மாணவி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். அவரை காப்பாற்ற சென்ற தாய் உடல் கருகியது.

மயிலாடுதுறை கூரைநாடு அண்ணா வீதியை சேர்ந்தவர் ராஜூலு. திருவிழாவில் பிளாஸ்டிக் கடை நடத்தி வருகிறார். இவரது மகள் கீர்த்திகா (16). மயிலாடுதுறையில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தார்.

இவரது தாய் மகாலட்சுமி மாணவியை தரக்குறைவாக திட்டியதாக கூறப்படுகிறது. இதனால் மனம் உடைந்த கீர்த்திகா தனது உடலில் மண் எண்ணை ஊற்றி தீவைத்து கொண்டார்.இதில் அவர் சம்பவ இடத்திலே இறந்தார். அவரை காப்பாற்ற சென்ற தாய் மகாலட்சுமிக்கு தீக்காயம் ஏற்பட்டது. அவர் மயிலாடுதுறை அரசு ஆஸ்பத்திரியில் முதலுதவி சிகிச்சை பெற்றார்.

பின்னர் மேல் சிகிச்சைக்காக புதுவை ஜிப்மர் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இது குறித்து மயிலாடுதுறை இன்ஸ்பெக்டர் மகாதேவன் விசாரணை நடத்தி வருகிறார்.

Similar News