பணிநிரந்தரம் செய்யக்கோரி என்.எல்.சி. ஒப்பந்த தொழிலாளர்கள் உண்ணாவிரதம்
நெய்வேலி:
நெய்வேலி என்.எல்.சி. யில் பணிபுரியும் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஒப்பந்த, இன்கோசர்வ் மற்றும் ஹவுசிகோஸ் தொழிலாளர்கள் பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளுக்காக தொடர்ந்து போராடி வருகின்றனர்.
இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று காலை நெய்வேலி ஸ்கியு பாலத்தில் அவர்கள் உண்ணாவிரதம் இருந்தனர்.
போராட்டத்திற்கு ஒப்பந்த சி.ஐ.டி.யூ. தலைவர் மாதாகிருஷ்ணன் தலைமை தாங்கினார். தொ.மு.ச. பொதுச்செயலாளர் சுகுமார் உண்ணாவிரதத்தை தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசியதாவது:-
ஒப்பந்த தொழிலாளர்களின் பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற தனியாக போராடாமல், நிரந்தர தொழிலாளர்களுடன் இணைந்து போராட வேண்டுகிறேன். இதற்கு அங்கீகரிக்கப்பட்ட தொமுச, சி.ஐ.டி.யூ. உறுதுணையாக இருந்து முன்னெடுத்துச் செல்வோம் என இத்தருணத்தில் உறுதி அளிக்கிறேன் என்றார்.
இதில் ஒப்பந்த சங்க நிர்வாகிகள் சி.ஐ.டி.யூ. சீனிவாசன், தொ.மு.ச. பழனிவேல், ஸ்டாலின், செந்தில்குமார், பழனிவேல், ஐ.என்.டி.யூ.சி. சுகுமார், ஜானகிராமன், அ.தொ.ச. ராஜபாண்டியன், பாட்டாளி சங்க குப்புசாமி, முருகவேல், காமராஜ், எல்.எல்.எப். சவுந்தர், வாழ்வுரிமை சங்க அன்பழகன், தேவராஜ், திருநாவுக்கரசு, பி.எம்.எஸ். விக்னேஸ்வரன், ஐ.டி.யூ. சங்க பரமேஸ்வரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.