செய்திகள்

சாக்கோட்டை அருகே தீக்குளித்து இளம்பெண் தற்கொலை

Published On 2016-08-11 14:48 IST   |   Update On 2016-08-11 14:48:00 IST
சாக்கோட்டை அருகே தீக்குளித்து இளம்பெண் தற்கொலை செய்து கொண்டார்.

காரைக்குடி:

காரைக்குடி அருகே சாக்கோட்டை பக்கமுள்ள பீர்கலைகாடு பகுதியை சேர்ந்தவர் பழனியப்பன். இவரது மூத்த மகள் ராஜாத்தி (வயது29). இவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த மாரிமுத்து என்பவருக்கும் கடந்த 5 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது

இந்த நிலையில் மாரிமுத்துவின் நடவடிக்கையில் மாற்றம் இருந்து வந்ததால் அவருக்கு பேய்பிடித்து இருப்பதாக ராஜாத்தி கருதினார்.

தன் கணவருக்கு இந்த நிலை ஏற்பட்டு விட்டதே என மனவேதனை அடைந்த ராஜாத்தி விரக்தியில் காணப்பட்டார்.

இந்த நிலையில் சம்பவத் தன்று வீட்டில் இருந்த மண்எண்ணையை தன் மீது ஊற்றி ராஜாத்தி தீ வைத்துக் கொண்டார். படுகாயம் அடைந்த அவரை மதுரை ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி நேற்றிரவு பரிதாபமாக இறந்தார்.

இது குறித்து சாக்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வராஜ் வழக்குப்பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகிறார்.

Similar News