செய்திகள்

நாகை அருகே அரசு பஸ் டிரைவர் தீக்குளித்து தற்கொலை

Published On 2016-08-10 15:56 IST   |   Update On 2016-08-10 15:56:00 IST
நாகூர் அருகே அரசு பஸ் டிரைவர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.

நாகப்பட்டினம்:

நாகை அருகே உள்ள திருப்புகழூர் புதுக்கடை கீரைத் தெருவை சேர்ந்தவர் காளிமுத்து (50).இவர் நன்னிலம் அரசு போக்குவரத்து கழகத்தில் டிரைவராக வேலை பார்த்து வந்தார்.

இவரது மனைவி மைதிலி. இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர். கணவரின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டதால் மைதிலி கணவரை பிரிந்து சென்றார். அவர் செல்லூரில் பெட்டிக் கடை வைத்துள்ளார்.

இந்த நிலையில் பனங்குடியை சேர்ந்த ராணி என்பவரை காளிமுத்து 2-வது திருமணம் செய்து கொண்டார். இவர்கள் மேலவாஞ்சூர் நேருநகரில் வசித்து வந்தனர்.

வாத நோயால் அவதிப்பட்டு வந்த காளிமுத்து தனது உடலில் மண்எண்ணை ஊற்றி தீ வைத்து தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து நாகூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் நடராஜன் விசாரணை நடத்தி வருகிறார்.

Similar News