கொடுமுடி அருகே மனைவியிடம் கோபித்து கொண்டு வந்தவர் திடீர் பலி
ஈரோடு:
கரூர் அருகே உள்ள துக்காச்சி சிறிஸ்டியன் தெருவை சேர்ந்தவா ஜோசப் (வயது 65). இவரது மனைவி அருள்மணி (60).
கணவன் –மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதனால் ஜோசப் தனது மனைவியிடம் கோபித்துகொண்டு வெளியூர் சென்று விடுவார்.
வழக்கம் போல கடந்த 3 மாதத்துக்கு முன்பு தனது மனைவியிடம் கோபித்து கொண்டு ஜோசப் சென்று விட்டார்.
இதனால் அருள்மணி தனது கணவரை தேடினார். அப்போது அவர் சாலைப்புதூரில் உள்ள சந்தைப்பேட்டை என்ற இடத்தில் தங்கி இருந்தது தெரியவந்தது.
எனவே அருள் மணி அங்கு சென்று தனது கணவரை பார்த்து விட்டு வந்தார். இந்த நிலையில் உடல்நலம் பாதிக்கப்பட்ட ஜோசப் அங்கு சுருண்டு விழுந்து இறந்து விட்டார்.
இதுபற்றி தகவல் கிடைத்தவுடன் கொடுமுடி போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று ஜோசப்பின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து கொடுமுடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.