செய்திகள்
அச்சரப்பாக்கம் பேரூராட்சி துணைத் தலைவர் கொலை: 2-வது நாளாக கடைகள் அடைப்பு
அச்சரப்பாக்கம் பேரூராட்சி துணைத் தலைவர் கொலைச் செய்யப்பட்டதைக் கண்டித்து அப்பகுதியில் 2-வது நாளாக கடைகள் அடைக்கப்பட்டன.
மதுராந்தகம்:
அச்சரப்பாக்கம், மேற்கு மாட வீதியில் வசித்து வந்தவர் சீனிவாசன் (வயது45).
அச்சரப்பாக்கம் பேரூராட்சி துணைத் தலைவராகவும், காஞ்சீபுரம் மாவட்ட தி.மு.க. விவசாய தொழிலாளர் அணி அமைப்பாளராகவும் இருந்தார்.
நேற்று மதியம் அவர் அச்சரப்பாக்கம் அருகே மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். அப்போது மோட்டார்சைக்கிள்களில் வந்த மர்ம கும்பல் சீனிவாசனை வழிமறித்து வெட்டி கொன்று தப்பி சென்று விட்டனர். சீனிவாசன் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிளும் மாயமாகி இருந்தது.
இதுகுறித்து அச்சரப்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். கொலையாளிகளை பிடிக்க டி.எஸ்.பி. சிவசங்கரன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு வந்தது. ஆனால் கொலைக்கான காரணம்? கொலையாளிகள் குறித்த தகவல் எதுவும் கிடைக்கவில்லை.
கொலையுண்ட சீனிவாசன் மீது எந்த வழக்கும் இல்லை. அவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்து இருக்கிறார். எனவே நிலம் வாங்கி விற்பதில் ஏற்பட்ட மோதலில் யாரேனும் சீனிவாசனை கூலிப்படையை ஏவி தீர்த்து கட்டி இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள்.
இது தொடர்பாக அவரது செல்போனில் கடைசியாக பேசியவர்கள் யார்-யார்? என்ற விவரத்தை சேகரித்து வருகின்றனர்.
இதற்கிடையே மாயமான சீனிவாசனின் மோட்டார் சைக்கிள் சோத்துப்பாக்கம் வந்தவாசி சாலையில் உள்ள செடிவாக்கம் கிராமத்தில் நிறுத்தப்பட்டு இருந்தது. அதனை போலீசார் மீட்டனர்.
கொலைக் கும்பல் அவ்வழியாக வந்தவாசி அல்லது திருவண்ணாமலைக்கு தப்பி சென்று இருக்கலாம் என்று தெரிகிறது. கொலையாளிகளை பிடிக்க தனிப்படையினர் அங்கு விரைந்து உள்ளனர்.
சீனிவாசனின் உடல் பிரேத பரிசோதனை முடிந்து அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இன்று காலை அவரது இறுதிச் சடங்கு நடக்கிறது.
இதனால் அப்பகுதியில் பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டு உள்ளது. அச்சரப்பாக்கத்தில் 2-வது நாளாக கடைகள் அடைக்கப்பட்டு உள்ளன. ஏராளமான போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டு இருக்கிறார்கள்.
சீனிவாசன் கொலை குறித்து அவரது தம்பி பாஸ்கர் கூறும்போது, “அண்ணன் தினமும் காலையில் நடைபயிற்சிக்கு வெளியில் செல்வது வழக்கம். கடந்த சில நாட்களாக சீனிவாசன் நடை பயிற்சிக்கு செல்லவில்லை. ஒருவித பயத்துடன் இருந்தார்.
இதுபற்றி கேட்டபோது, யாரிடமும் எதுவும் சொல்லவில்லை. அவருக்கு ஏற்கனவே மர்ம நபர்கள் மிரட்டல் விடுத்து இருக்கலாம். இதுபற்றி போலீசார் விசாரணை நடத்தி கொலையாளிகளை கைது செய்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.
அச்சரப்பாக்கம், மேற்கு மாட வீதியில் வசித்து வந்தவர் சீனிவாசன் (வயது45).
அச்சரப்பாக்கம் பேரூராட்சி துணைத் தலைவராகவும், காஞ்சீபுரம் மாவட்ட தி.மு.க. விவசாய தொழிலாளர் அணி அமைப்பாளராகவும் இருந்தார்.
நேற்று மதியம் அவர் அச்சரப்பாக்கம் அருகே மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். அப்போது மோட்டார்சைக்கிள்களில் வந்த மர்ம கும்பல் சீனிவாசனை வழிமறித்து வெட்டி கொன்று தப்பி சென்று விட்டனர். சீனிவாசன் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிளும் மாயமாகி இருந்தது.
இதுகுறித்து அச்சரப்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். கொலையாளிகளை பிடிக்க டி.எஸ்.பி. சிவசங்கரன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு வந்தது. ஆனால் கொலைக்கான காரணம்? கொலையாளிகள் குறித்த தகவல் எதுவும் கிடைக்கவில்லை.
கொலையுண்ட சீனிவாசன் மீது எந்த வழக்கும் இல்லை. அவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்து இருக்கிறார். எனவே நிலம் வாங்கி விற்பதில் ஏற்பட்ட மோதலில் யாரேனும் சீனிவாசனை கூலிப்படையை ஏவி தீர்த்து கட்டி இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள்.
இது தொடர்பாக அவரது செல்போனில் கடைசியாக பேசியவர்கள் யார்-யார்? என்ற விவரத்தை சேகரித்து வருகின்றனர்.
இதற்கிடையே மாயமான சீனிவாசனின் மோட்டார் சைக்கிள் சோத்துப்பாக்கம் வந்தவாசி சாலையில் உள்ள செடிவாக்கம் கிராமத்தில் நிறுத்தப்பட்டு இருந்தது. அதனை போலீசார் மீட்டனர்.
கொலைக் கும்பல் அவ்வழியாக வந்தவாசி அல்லது திருவண்ணாமலைக்கு தப்பி சென்று இருக்கலாம் என்று தெரிகிறது. கொலையாளிகளை பிடிக்க தனிப்படையினர் அங்கு விரைந்து உள்ளனர்.
சீனிவாசனின் உடல் பிரேத பரிசோதனை முடிந்து அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இன்று காலை அவரது இறுதிச் சடங்கு நடக்கிறது.
இதனால் அப்பகுதியில் பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டு உள்ளது. அச்சரப்பாக்கத்தில் 2-வது நாளாக கடைகள் அடைக்கப்பட்டு உள்ளன. ஏராளமான போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டு இருக்கிறார்கள்.
சீனிவாசன் கொலை குறித்து அவரது தம்பி பாஸ்கர் கூறும்போது, “அண்ணன் தினமும் காலையில் நடைபயிற்சிக்கு வெளியில் செல்வது வழக்கம். கடந்த சில நாட்களாக சீனிவாசன் நடை பயிற்சிக்கு செல்லவில்லை. ஒருவித பயத்துடன் இருந்தார்.
இதுபற்றி கேட்டபோது, யாரிடமும் எதுவும் சொல்லவில்லை. அவருக்கு ஏற்கனவே மர்ம நபர்கள் மிரட்டல் விடுத்து இருக்கலாம். இதுபற்றி போலீசார் விசாரணை நடத்தி கொலையாளிகளை கைது செய்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.