செய்திகள்

அரியலூர் மாவட்ட கபடி விளையாட்டு வீரர்கள் தேர்வு 18–ந்தேதி நடக்கிறது

Published On 2016-07-13 18:09 IST   |   Update On 2016-07-13 18:09:00 IST
அரியலூர் மாவட்ட கபடிவிளையாட்டு வீரர்கள் தேர்வு வரும் 18–ம் தேதியன்று மாலை 3 மணியளவில் தத்தனூர் மீனாட்சி ராமசாமி கலைமற்றும் அறிவியல் கல்லூரி விளையாட்டு மைதானத்தில் நடைபெற உளளது.

ஜெயங்கொண்டம்:

அரியலூர் மாவட்ட கபடிவிளையாட்டு வீரர்கள் தேர்வு வரும் 18–ம் தேதியன்று மாலை 3 மணியளவில் தத்தனூர் மீனாட்சி ராமசாமி கலைமற்றும் அறிவியல் கல்லூரி விளையாட்டு மைதானத்தில் நடைபெற உளளது. சப்–ஜூனியர் மற்றும் ஜூனியர் பிரிவுகளுக்கு தேர்வு நடைபெறவுள்ளது.

சப்–ஜூனியருக்கான வயது வரம்பு 01.01.2001அன்று அல்லது அதற்குபிறகு பிறந்திருக்க வேண்டும். எடை 50 கிலோவிற்கு உட்பட்டு இருக்க வேண்டும். ஜூனியருக்கான வயது வரம்பு 01.01.1997க்குள் பிறந்திருக்கவேண்டும். இப்போட்டியில் கலந்துகொள்ள விருப்பமுள்ள வீரர்கள் அரியலூர் மாவட்டத்திற்கு உட்பட்டவராக இருக்கவேண்டும்.

திறமையான விளையாட்டு வீரர்கள் தங்களுக்கான வயது வரம்பு சான்றிதழின் நகல் எடுத்து வரவேண்டும் என மீனாட்சி ராமசாமி கல்விகுழுமத்தின் தாளாளரும், அரியலூர் மாவட்ட அமச்சூர், கபடிக்கழகத்தின் தலைவருமான ரகுநாதன் தனது செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.

Similar News