செய்திகள்

நீர்வரத்து தொடர்ந்து அதிகரிப்பு: பவானிசாகர் அணை 57 அடியாக உயர்வு

Published On 2016-07-13 09:53 IST   |   Update On 2016-07-13 09:53:00 IST
ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணைக்கு கடந்த சில நாட்களாக நீர்வரத்து அதிகரித்து உள்ளது. இதனால் அணையின் நீர் மட்டம் படிப்படியாக உயர்ந்து உள்ளது.
ஈரோடு:

ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணைக்கு கடந்த சில நாட்களாக நீர்வரத்து அதிகரித்து உள்ளது. இதனால் அணையின் நீர் மட்டம் படிப்படியாக உயர்ந்து உள்ளது.

பல நாட்களாக 40 அடியிலிருந்து 45 அடி வரை நிலவிய அணையின் நீர் மட்டம் அரைசதம் (50 அடி) போட்டது.

50 அடியை தாண்டியதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். இந்தநிலையில் கடந்த சில நாட்களாக அணையின் நீர்பிடிப்பு பகுதியில் பெய்த பரவலான மழையாலும், மேலும் ஊட்டி மலை பில்லூர் அணையிலிருந்து மின்சாரம் தயாரிக்க தண்ணீர்திறந்து விடப்படுவதாலும்பவானி சாகர் அணைக்கு தொடர்ந்து தண்ணீர்வரத்து அதிகரித்தது.

இன்று காலை 10 மணி நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 57 அடியை தொட்டது.

அணைக்கு வினாடிக்கு 2827கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையிலிருந்து பவானி ஆற்றுக்கு குடிநீருக்காக 150 கனஅடியும், வாய்க்காலுக்கு 5 கனஅடி தண்ணீரும் திறந்து விடப்பட்டு வருகிறது.

Similar News