செய்திகள்

ஆக்கிரமிப்பில் கட்டப்பட்ட வீடுகள் இன்று இடித்து அகற்றம்

Published On 2016-07-12 20:33 IST   |   Update On 2016-07-12 20:33:00 IST
கொல்லம்பாளையம் ரூடிஸ் காலனியில் ஆக்கிரமிப்பில் கட்டப்பட்ட வீடுகள் இன்று இடித்து அகற்றம்

ஈரோடு:

நீர்நிலைகளில் ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள கட்டிடங்கள் மற்றும் வீடுகளை அகற்ற கோர்ட் உத்தரவிட்டிருந்தது. அதன் படி ஈரோடு மாவட்டத்தில் கோர்ட் உத்தரவுப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இதன்படி ஈரோடு சூரம் பட்டி அணைகட்டு பகுதியில் சுமார் 200–க்கும் மேற்பட்ட வீடுகள் இடித்து அகற்றப்பட்டன.

இதேபோல் ஈரோடு கொல்லம் பாளையம் ரூடிஸ் காலனியில் பெரும்பள்ளம் ஓடை அருகே புறம்போக்கு இடத்தில் ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள கட்டிடம், வீடுகள் ஆகியவற்றையும் இடிக்க பொதுப்பணித் துறையினர் நடவடிக்கை எடுத்தனர்.

இதையொட்டி அங்கு வசித்து வந்தவர்களுக்கு நோட்டீசும் வழங்கப்பட்டது. அப்பகுதியில் மாடி வீடு கட்டப்பட்டு அதில் 11 வீடுகள் வாடகைக்கு விடப்பட்டிருந்தது. இந்த மாடி வீடும் இடிக்க முடிவு செய்யப்பட்டது. அங்கு வசித்த பொதுமக்கள் மேலும் அந்த பகுதியில் வசித்த பொதுமக்களும் வீட்டை காலி செய்து தங்கள் உடமைகளை எடுத்து சென்று விட்டனர்.

இந்த நிலையில் இன்று மொடக்குறிச்சி தாசில்தார் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் அங்கு வந்தனர். ஆக்கிரமிப்பில் கட்டப்பட்டிருந்த வீடுகள் பொக்லைன் எந்திரம் மூலம் இடித்து அகற்றப்பட்டது.

Similar News