செய்திகள்

சத்தியமங்கலம் வனப்பகுதியில் வனவிலங்குகள் கணக்கெடுப்பு பணி இன்று தொடக்கம்

Published On 2016-07-12 09:28 IST   |   Update On 2016-07-12 09:29:00 IST
சத்தியமங்கலம் வனப்பகுதியில் வனவிலங்குகள் கணக்கெடுப்பு பணி இன்று முதல் தொடக்கம். 230 பேர் வனத்துக்குள் சென்று இந்த பணியில் ஈடுபடுகின்றனர்
சத்தியமங்கலம்:

ஈரோடு மாவட்டம் சத்திய மங்கலம் வனப்பகுதியில் ஆண்டு தோறும் வனவிலங்குகள் கணக்கெடுப்பு பணி நடைபெறும்.

கடந்த ஆண்டு மட்டும் கணக்கெடுப்பு பணி நடக்கவில்லை. இந்த நிலையில் இந்தாண்டு கணக்கெடுப்பு நடத்த முடிவு செய்யப்பட்டது.

இதற்காக காட்டுக்குள் நுழைந்து வனவிலங்குகளின் கணக்கெடுப்பு நடத்த உள்ள குழுவினருக்கு அந்தந்த வன ரேஞ்சர் அலுவலகத்தில் சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டது.

இந்த நிலையில் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 6 மணிக்கு வனவிலங்குகள் கணக்கெடுப்பு நடத்த வன ஆர்வலர்கள் மற்றும் வன படையினர் சத்தியமங்கலம் காட்டுக்குள் புகுந்தனர்.

சத்தியமங்கலம் வனப் பகுதியில் மொத்தம் 46 வன ‘பீட்’ உள்ளது. ஒவ்வொரு பீட்டுக்கும் 5 பேர் என மொத்தம் 230 பேர் வனத்துக்குள் புகுந்துள்ளனர்.

இவர்கள் காட்டுக்குள் நீர்நிலைகளில் உள்ள கால் தடங்கள் மற்றும் வனவிலங்குகளின் எச்சங்கள் பற்றி கணக்கெடுத்து என்னென்ன வன விலங்குகள் இங்கு வசிக்கிறது. எண்ணிக்கை அதிகரித்து உள்ளதா? என்று கணக்கெடுப்பார்கள்.

குறிப்பிட்ட இடத்தில் யானைகள், காட்டெருமைகள் மற்றும் புலி, சிறுத்தை, கரடிகள் ஆகிய வனவிலங்குகள் தங்கும் இடங்களிலும் துணிச்சலுடன் சென்று கணக்கெடுப்பு பணியில் ஈடுபடுகிறார்கள்.

இந்த கணக்கெடுப்பு பணி தொடர்ந்து ஒரு வாரம் நடக்கிறது. தினமும் காலை 6 மணிக்கு வனத்துக்குள் புகும் இந்த குழுவினர் இரவு 7 மணிக்குள் வெளியே வந்துவிடுவார்கள்.

Similar News