செய்திகள்

தாய்–மகன் கடத்தலா? போலீசார் விசாரணை

Published On 2016-07-10 23:20 IST   |   Update On 2016-07-10 23:20:00 IST
மகனுக்கு உடல்நிலை சரியில்லாததால் தஞ்சாவூரில் உள்ள ஒரு மருத்துவமனைக்கு அழைத்த சென்ற தாய் வீடு திரும்ப வில்லை. இது குறித்து கணவர் போலீசில் புகார் தெரிவித்துள்ளார்.
திருமானூர் வாண்டாராயன் கட்டளை கிராமம் காலனிதெருவை சேர்ந்தவர் முருகபாண்டியன். இவரது மனைவி செண்பகம் (வயது22). இவருக்கு நித்திக்ரோஷன் என்ற 2 வயது குழந்தை உள்ளது.

இந்நிலையில் சம்பவத்தன்று நித்திரோஷனுக்கு உடல்நிலை சரியில்லாததால் தஞ்சாவூரில் உள்ள ஒரு மருத்துவமனையில் காண்பிக்க 2 பேரும் சென்றனர். ஆனால் வெகு நேரமாகியும் அவர்கள் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த முருகபாண்டியன் மற்றும் அவரது உறவினர்கள் செண்பகம், நித்திக்ரோஷனையும் பல்வேறு இடத்தில் தேடி பார்த்தனர். ஆனால் எங்கு தேடியும் அவர்கள் கிடைக்கவில்லை.

இது குறித்து திருமானூர் போலீஸ் நிலையத்தில் முருகபாண்டியன் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து செண்பகம், அவரது குழந்தை நித்திரோஷனையும் யாரும் கடத்தி சென்றனரா? என்பது உள்பட பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News