செய்திகள்

பவானிசாகர் அணை நீர்மட்டம் 51 அடியை தாண்டியது

Published On 2016-07-05 12:43 IST   |   Update On 2016-07-05 12:43:00 IST
பவானிசாகர் அணையின் நீர்மட்டம் இன்று காலை 51.23 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 1327 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.
ஈரோடு:

ஈரோடு மாவட்டத்தில் உள்ள பவானிசாகர் அணை நீர்பிடிப்பு பகுதியில் பெய்து வந்த மழையால் நீர்மட்டம் கணிசமாக உயர்ந்தது. 42 அடியிலிருந்து படிப்படியாக உயர்ந்து 50 அடியை தொட்டது. கடந்த சில தினங்களாக பெய்த மழையால் இந்த நீர்மட்டம் உயர்ந்தது.

தற்போது நீர்பிடிப்பு பகுதியில் மழை குறைந்தாலும் நீலகிரி அணையிலிருந்து மின்சாரம் தயாரிக்க தண்ணீர் திறந்து விடப்பட்டு உள்ளது. இதனால் நீர்வரத்து மேலும் இன்று காலை 8 மணி முதல் அதிகரித்து உள்ளது.

இன்று காலை 9 மணி நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 51.23 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 1327 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. வாய்க்காலில் பாசனத்துக்கு 100 கன அடி தண்ணீரும், ஆற்றுக்கு குடிநீருக்கு 5 கன அடி தண்ணீரும் திறந்து விடப்பட்டுள்ளது.

Similar News