செய்திகள்

மீன்சுருட்டி அருகே லாரி–கார் மோதல்: 5 பேர் படுகாயம்

Published On 2016-07-04 20:03 IST   |   Update On 2016-07-04 20:03:00 IST
அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி அருகே லாரி–கார் மோதிக்கொண்ட விபத்தில் 5 பேர் படுகாயமடைந்தனர்.
விழுப்புரம் மாவட்டம் வீராணம் பகுதியை சேர்ந்தவர் சதீஷ் (வயது 40). லாரி டிரைவர். இவர், திருச்சியிலிருந்து புறப்பட்டு அரியலூர் வழியாக கடலூரை நோக்கி லோடு ஏற்றுவதற்காக லாரியை ஒட்டி சென்றார். அப்போது நேற்று முன்தினம் இரவு அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி அருகே கும்பகோணம்–சென்னை தேசிய நெடுஞ்சாலையில் வந்த போது எதிரே வந்த கார், சதீஷ் ஓட்டி வந்த லாரி மீது நேருக்கு நேர் பயங்கரமாக மோதியது.

இதனால் காரின் முன்பகுதி அப்பளம் போல் நொறுங்கியது. இந்த விபத்தில் கார் டிரைவர் உள்பட காரில் இருந்தவர்கள் 5 பேர் படுகாயமடைந்தனர். இது குறித்து தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மீன்சுருட்டி போலீசார் அந்த 5 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக ஜெயங்கொண்டம் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

போலீசாரின் முதல் கட்ட விசாரணையில், இந்த விபத்தில் காரை ஓட்டி வந்த டிரைவர் காஞ்சிபுரம் மாவட்டம் செய்யாறு பகுதியை சேர்ந்த சூர்யா (23) என்பதும், இவர் தனது நண்பர்கள் கார்த்திக், பாலசுப்பிரமணியன், கந்தசாமி காளிமுத்து ஆகியோரை அழைத்து கொண்டு தஞ்சாவூர் பகுதியில் நடைபெறும் ஒரு திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக காரில் சென்ற போது திடீரென விபத்து ஏற்பட்டதும் தெரியவந்தது.

மேல் சிகிச்சைக்காக சூர்யா உள்ளிட்ட 5 பேரும்  தஞ்சாவூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்லப்பட்டனர். இந்த விபத்து குறித்து மீன்சுருட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News