செய்திகள்

பவானிசாகர் அணைக்கு தொடர்ந்து தண்ணீர் வரத்து அதிகரிப்பு

Published On 2016-07-04 17:25 IST   |   Update On 2016-07-04 17:25:00 IST
பவானிசாகர் அணைக்கு வரும் தண்ணீரின் அளவு தொடர்ந்து அதிகரித்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 50 அடியை தாண்டி தொடர்ந்து நிரம்பி வருவதால் ஈரோடு மாவட்ட விவசாயிகள் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

மேலும் நீர்பிடிப்பு பகுதியிலும் தொடர்ந்து மழை பெய்து வருவதால் இரட்டை மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இன்னும் இரண்டொரு நாளில் அணையின் நீர்மட்டம் 55 அடியாக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனால் பாசனத்துக்கு விரைவில் தண்ணீர் திறக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அணையின் நீர்மட்டம் இன்று 50.81 அடியாக இருந்தது.

Similar News