செய்திகள்

சிங்கம்புணரி அருகே தடையை மீறி சீறிப்பாய்ந்த காளைகள் - போலீசார் அதிர்ச்சி

Published On 2016-07-04 11:57 IST   |   Update On 2016-07-04 11:56:00 IST
சிங்கம்புணரி அருகே தடையை மீறி சிறிப் பாய்ந்த காளைகளால் போலீசார் அதிர்ச்சி அடைந்தனர்.
சிங்கம்புணரி:

தமிழ்நாட்டில் பாரம்பரிய வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியை அடுத்த புதூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட முருக்குபட்டியில் ஊர் கோவில் காளைகளுக்கு முறையாக அனுமதி பெற்று பொங்கல் வைத்தும், துண்டுகள் கட்டியும் மரியாதை செய்து கிராமத்தினர் காளைகளை வணங்கி சென்றனர்.

இந்த நிலையில் வேறு கிராமங்களில் இருந்து ஜல்லிக்கட்டு காளைகள் வராதபடி பல இடங்களில் சோதனை சாவடி அமைத்து போலீசார் கண்காணித்து வந்தனர். இருப்பினும் சுத்துபட்டு கிராமங்களில் இருந்து காட்டு வழிகளில் வந்து குவிந்த சுமார் 500-க்கும் மேற்பட்ட ஜல்லிக்கட்டு காளைகளை சிலர் திடீர் என அவிழ்த்து விட்டனர். இதனால் அதிர்ச்சி அடைந்த சிவகங்கை மாவட்ட காவல்துறையினர் தடுத்ததும் ஜல்லிக்கட்டு காளைகளை பக்கத்து மாவட்டமான புதுக்கோட்டை மாவட்ட எல்லையில் வயல் வெளியில் அவிழ்த்து விட்டனர்.

முருக்குபட்டியில் நடக்கும் மஞ்சுவிரட்டு தேதியை இணையத்தில் (முகபுத்தகத்தில்) பதிவிட்டதால் தென் மாட்டங்கள் முழுவதிலும் இருந்தும் மாடுபிடி வீரர்களும் மஞ்சுவிரட்டு ஆர்வலர்களும் வந்து குவிந்தனர்.

Similar News