செய்திகள்

ஜெயங்கொண்டம் அருகே வேன் கவிழ்ந்து 7 பேர் காயம்

Published On 2016-06-29 19:27 IST   |   Update On 2016-06-29 19:27:00 IST
ஆண்டிமடம் பெரிய ஏரி அருகே உள்ள வளைவில் திரும்பும்போது, கட்டுப்பாட்டை இழந்த வேன் சாலையோரம் கவிழ்ந்தது. இதில் வேனில் பயணம் செய்த 7 பேர் காயம் அடைந்தனர்.

ஜெயங்கொண்டம்:

கடலூர் மாவட்டம், வெள்ளுர் கிராமத்தைச் சேர்ந்தவர் கோவிந்தராஜ் ( வயது 75). இவரது உறவினரான அரியலூர் மாவட்டம், ஆண்டிமடம் அருகே சிலம்பூர் கிராமத்தைச் சேர்ந்த கதிர்வேல் இறந்து விட்டார். அவரது இறுதி சடங்கு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள கோவிந்தராஜ் மற்றும் அதேபகுதியைச் சேர்ந்த அவரது உறவினர்கள் 20 பேர் ஒரு வேனில் சிலம்பூருக்கு சென்றனர். வேனை வெள்ளுர் கிராமத்தைச் சேர்ந்த பாரதிராஜா ஓட்டினார்.

ஆண்டிமடம் பெரிய ஏரி அருகே உள்ள வளைவில் திரும்பும்போது, கட்டுப்பாட்டை இழந்த வேன் சாலையோரம் கவிழ்ந்தது. இதில் வேனில் பயணம் செய்த வெள்ளுர் கிராமத்தை சேர்ந்த லதா (40), மசலாம்பாள் (55), சுமதி (45), சவுந்தலா (58) , செந்தமிழ்ச்செல்வி (36), தேன்மொழி (55), கோவிந்தராஜ் (75) ஆகியோர் காயமடைந்தனர். அவர்கள் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News