செய்திகள்
ஈரோட்டில் விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம் 24–ந்தேதி நடக்கிறது
ஈரோட்டில் விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம் 24–ந்தேதி நடைபெறுகிறது என்று மாவட்ட கலெக்டர் பிரபாகர் தெரிவித்துள்ளார்.
ஈரோடு:
ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலக வளர்ச்சி மன்ற கூட்ட அரங்கில் மாதம் தோறும் வேளாண் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடக்கிறது.
இதில் ஈரோடு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்து விவசாயிகள் தங்கள் குறைகளை கூறுவார்கள். மனுக்களும் கொடுப்பார்கள்.
அதே போல் ஜுன் மாதத்துக்கான வேளாண் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் வரும் 24-ந்தேதி (வெள்ளிக்கிழமை) நடக்கிறது.
11மணி முதல் 11..30 மணி வரை மனுக்கள் கொடுக்கலாம். 11.30மணி முதல் 12.30 வரை விவசாய சங்க பிரதிநிதிகள் விவசாயம் தொடர்பான தங்கள் பகுதி பிரச்சனைகள் குறித்து தகவல் தெரிவிக்கலாம்.
பிற்பகல் 12.30மணி முதல் 1.30மணி வரை அலுவலர்களின் விளக்கங்கள் தெரிவிக்கப்பட உள்ளது. இக்கூட்டத்தில் விவசாயிகள் கலந்து கொண்டு பயன்பெறுமாறு மாவட்ட கலெக்டர் பிரபாகர் கூறி உள்ளார்.
ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலக வளர்ச்சி மன்ற கூட்ட அரங்கில் மாதம் தோறும் வேளாண் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடக்கிறது.
இதில் ஈரோடு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்து விவசாயிகள் தங்கள் குறைகளை கூறுவார்கள். மனுக்களும் கொடுப்பார்கள்.
அதே போல் ஜுன் மாதத்துக்கான வேளாண் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் வரும் 24-ந்தேதி (வெள்ளிக்கிழமை) நடக்கிறது.
11மணி முதல் 11..30 மணி வரை மனுக்கள் கொடுக்கலாம். 11.30மணி முதல் 12.30 வரை விவசாய சங்க பிரதிநிதிகள் விவசாயம் தொடர்பான தங்கள் பகுதி பிரச்சனைகள் குறித்து தகவல் தெரிவிக்கலாம்.
பிற்பகல் 12.30மணி முதல் 1.30மணி வரை அலுவலர்களின் விளக்கங்கள் தெரிவிக்கப்பட உள்ளது. இக்கூட்டத்தில் விவசாயிகள் கலந்து கொண்டு பயன்பெறுமாறு மாவட்ட கலெக்டர் பிரபாகர் கூறி உள்ளார்.