செய்திகள்

பண்ருட்டி அருகே கர்ப்பிணிபெண் மீது தாக்குதல்: 4 பேர் மீது போலீசில் புகார்

Published On 2016-06-20 18:28 IST   |   Update On 2016-06-20 18:28:00 IST
கர்ப்பிணிபெண் மீது தாக்குதல் நடத்திய 4 பேர் மீது போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் 4 பேரை தேடி வருகின்றனர்.
பண்ருட்டி:

பண்ருட்டியை அடுத்த ஆ.நத்தம் கிராமத்தை சேர்ந்தவர் சதீஷ். இவரது மனைவி தேவிகா (வயது 21). தற்போது நிறைமாத கர்ப்பிணியாக உள்ளார்.

சதீசுக்கும் அதே பகுதியை சேர்ந்த சந்தோஷ் என்பவருக்கும் இடையே முன்விரோதம் இருந்தது. இந்த நிலையில் வெளியூர் சென்றிருந்த சதீசும், அவரது மனைவி தேவிகாவும் ஊருக்கு திரும்பினர். அப்போது அங்கு வந்த சந்தோஷ் மற்றும் அவரது உறவினர்களான விஷ்ணு, பரசுராமன், தமிழழகன் ஆகியோர் அவர்களை வழிமறித்து வாய்க்குவந்தபடி திட்டினர்.

பின்னர் கணவன்–மனைவியை தாக்கிவிட்டு ஓடிவிட்டனர். இதில் தேவிகா படுகாயம் அடைந்தார். உடனடியாக அவரை பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மேல் சிகிச்சைக்காக கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

தாக்குதல் குறித்து புதுப்பேட்டை போலீசில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் ஏழுமலை வழக்குபதிவு செய்து கணவன்–மனைவியை தாக்கிய 4 பேரை வலைவீசி தேடி வருகின்றனர்.

Similar News