செய்திகள்
அரசு பஸ் மோட்டார் சைக்கிள் மீது மோதியதில் கொத்தனார் பரிதாபமாக பலியானார்.
திருப்புவனம்:
மதுரை வண்டியூர் பகுதியைச் சேர்ந்தவர் செல்வம் (வயது 45). கொத்தனார். சம்பவத்தன்று இவர் திருப்பாச்சேத்தி அருகே உள்ள விளத்தூரில் கொத்தனார் வேலை பார்த்து விட்டு மதுரை வண்டியூருக்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது, திருப்புவனம் போலீஸ் சரகம் கழுகேர்கடை விலக்கு பகுதியில் சென்ற கொண்டிருந்த போது மதுரையில் இருந்து ராமேசுவரம் நோக்கி வந்த அரசு பஸ், மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
இந்த விபத்தில் பலத்த காயமடைந்த செல்வம் மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் நேற்று செல்வம் சிகிச்சை பலனின்றி இறந்தார்.
இதுகுறித்து திருப்புவனம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சேசு வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றார்.
மதுரை வண்டியூர் பகுதியைச் சேர்ந்தவர் செல்வம் (வயது 45). கொத்தனார். சம்பவத்தன்று இவர் திருப்பாச்சேத்தி அருகே உள்ள விளத்தூரில் கொத்தனார் வேலை பார்த்து விட்டு மதுரை வண்டியூருக்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது, திருப்புவனம் போலீஸ் சரகம் கழுகேர்கடை விலக்கு பகுதியில் சென்ற கொண்டிருந்த போது மதுரையில் இருந்து ராமேசுவரம் நோக்கி வந்த அரசு பஸ், மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
இந்த விபத்தில் பலத்த காயமடைந்த செல்வம் மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் நேற்று செல்வம் சிகிச்சை பலனின்றி இறந்தார்.
இதுகுறித்து திருப்புவனம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சேசு வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றார்.