செய்திகள்

கத்தியைக்காட்டி மிரட்டி பெண்ணிடம் தாலிச்சங்கிலி பறிப்பு

Published On 2016-06-12 17:45 IST   |   Update On 2016-06-12 17:45:00 IST
கத்தியைக்காட்டி மிரட்டி பெண்ணிடம் தாலிச்சங்கிலி பறித்தது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிவகங்கை:

தேவகோட்டை நகர் ஆலம்பட்டார் வீதியை சேர்ந்தவர் மூர்த்தி. இவரது மனைவி சுமத்ரா (வயது 25). சம்பவத்தன்று இவர் வீட்டில் இருந்து அந்த பகுதியில் உள்ள கடைக்கு நடந்து சென்று கொண்டிருந்தார்.

அப்போது எதிரே வந்த சுமார் 25 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் சுமத்ராவை வழிமறித்து கத்தியை காட்டி மிரட்டி அவர் அணிந்திருந்த 3¾ பவுன் தாலிச்சங்கிலியை பறித்துக் கொண்டு அங்கிருந்து தப்பிச் சென்றார். இது குறித்த புகாரின் பேரில் தேவகோட்டை நகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Similar News