செய்திகள்
பூம்புகார் அருகே காரில் மதுபானம் கடத்தி வந்தவர் கைது
பூம்புகார் அருகே புதுச்சேரியில் இருந்து மதுபானம் கடத்தி வந்தவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சீர்காழி:
நாகை மாவட்டம் பூம்புகார் அருகே உள்ள மேலையூர் காவிரி ஆறு சட்டர்ஸ் பகுதியில் மதுவிலக்கு அமலாக்க பிரிவு கூடுதல் டி.எஸ்.பி. தங்கதுரை அறிவுரையின் பேரில் சீர்காழி மதுவிலக்கு பிரிவு இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) மயில்சாமி தலைமையில் போலீசார் நேற்று இரவு வாகன சோதனை நடத்தினர்.
அப்போது காரைக்கால் பகுதியில் இருந்து வந்த ஒரு காரை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் 20 அட்டைபெட்டிகளில் 960 மது பாட்டில்கள் இருந்தன. இதன் மதிப்பு ரூ.1½ லட்சம் ஆகும். இதனை புதுச்சேரியிலிருந்து கடத்தி வந்தது தெரியவந்தது. இதனை தொடர்ந்து மதுபானங்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இதனை கடத்தி வந்த திருநள்ளாறு பூமங்கலம் பகுதியை சேர்ந்த ரமேஷ் (32) என்பவரை போலீசார் கைது செய்தனர். மேலும் மதுபானம் கடத்த பயன்படுத்திய காரையும் பறிமுதல் செய்தனர்.
இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து யாருக்காக மதுபானம் கடத்தி வரப்பட்டது என்பது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் பூம்புகார் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நாகை மாவட்டம் பூம்புகார் அருகே உள்ள மேலையூர் காவிரி ஆறு சட்டர்ஸ் பகுதியில் மதுவிலக்கு அமலாக்க பிரிவு கூடுதல் டி.எஸ்.பி. தங்கதுரை அறிவுரையின் பேரில் சீர்காழி மதுவிலக்கு பிரிவு இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) மயில்சாமி தலைமையில் போலீசார் நேற்று இரவு வாகன சோதனை நடத்தினர்.
அப்போது காரைக்கால் பகுதியில் இருந்து வந்த ஒரு காரை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் 20 அட்டைபெட்டிகளில் 960 மது பாட்டில்கள் இருந்தன. இதன் மதிப்பு ரூ.1½ லட்சம் ஆகும். இதனை புதுச்சேரியிலிருந்து கடத்தி வந்தது தெரியவந்தது. இதனை தொடர்ந்து மதுபானங்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இதனை கடத்தி வந்த திருநள்ளாறு பூமங்கலம் பகுதியை சேர்ந்த ரமேஷ் (32) என்பவரை போலீசார் கைது செய்தனர். மேலும் மதுபானம் கடத்த பயன்படுத்திய காரையும் பறிமுதல் செய்தனர்.
இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து யாருக்காக மதுபானம் கடத்தி வரப்பட்டது என்பது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் பூம்புகார் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.