செய்திகள்

தேவகோட்டை அருகே பீரோவை உடைத்து வெள்ளிப்பொருட்கள் திருட்டு

Published On 2016-06-04 15:29 IST   |   Update On 2016-06-04 15:29:00 IST
தேவகோட்டை அருகே விவசாயி வீட்டில் இருந்த பீரோவை உடைத்து வெள்ளிப்பொருட்கள் திருடிய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.

தேவகோட்டை:

தேவகோட்டை அருகே தாழையூர் முத்துபெரிய நாயகி நகரில் விவசாயி செல்வராஜ் என்பவர் வசித்து வருகிறார்.

இவர் குடும்பத்துடன் மதுரையில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றுள்ளார். திரும்பி வந்து வீட்டை திறக்கும் போது வீட்டின் பின்பக்க கதவு உடைத்து பீரோ உடைக்கப்பட்டு கிடந்தது.

பீரோவில் வைத்திருந்த அரைக்கிலோ மதிப்புள்ள வெள்ளி சாமான்கள் திருடு போனதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்பு ஆறாவயல் போலீசுக்கு தகவல் தெரிவித்தார். அங்கு வந்த போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரனை செய்து வருகிறார்கள்.

இதேபோல சம்பவங்கள் இப்பகுதியில் அடிக்கடி நடப்பதால் அப்பகுதில் குடியிருப்போர் அச்சத்துடன் வாழ்ந்து வருகிறனர்.

Similar News