செய்திகள்

உடையார்பாளையம் அருகே காதல் திருமணம் செய்த வாலிபர் தற்கொலை

Published On 2016-06-03 16:40 IST   |   Update On 2016-06-03 16:40:00 IST
உடையார்பாளையம் அருகே காதல் திருமணம் செய்த வாலிபர் பூச்சி மருந்தை குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
ஜெயங்கொண்டம்:

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகில் உள்ள புளியங்குழி மேலத்தெருவை சேர்ந்தவர் சின்னத்தம்பி. இவரது மகன் பிரபு (வயது22). இவர்கடந்த 4 மாதங்களுக்கு முன்னர் உஞ்சினி கிராமத்தை சேர்ந்த சங்கர் மகள் ரஞ்சிதாவை திருமணம் செய்துக்கொண்டு அதே ஊரில் வசித்து வந்தார்.

இந்நிலையில் அவர் நேற்று முன்தினம் புளியங்குழியில் உள்ள பெற்றோர் வீட்டுக்கு வந்தபோது அவரது தாய் பூங்கோதை குடும்பத்தின் மூத்த மகனான நீ பொறுப்பு இல்லாமல் மாமனார் வீட்டோடு போய்விட்டாயே என்று திட்டியுள்ளார். இதனால் மனமுடைந்த பிரபு வீட்டில் வயலுக்கு அடிக்க வைத்திருந்த பூச்சி மருந்தை எடுத்து குடித்து விட்டார். உயிருக்கு ஆபத்தான நிலைமையில் அவரை ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி இறந்தார். இது குறித்து உடையார்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Similar News