செய்திகள்
வேப்பூர் அருகே விவசாயி வீட்டில் ரூ.3 லட்சம் நகை கொள்ளை
வேப்பூரில் விவசாயி வீட்டில் புகுந்து ரூ.3 லட்சம் மதிப்பிலான நகை, பணத்தை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றனர்.
வேப்பூர்:
கடலூர் மாவட்டம் வேப்பூரை அடுத்த சேப்பாக்கத்தில் லாரி டிரைவரை கொன்று மர்ம மனிதர்கள் பணத்தை கொள்ளையடித்து சென்றனர்.
இந்த பரபரப்பு அடங்குவதற்குள் வேப்பூர் அருகே மர்ம மனிதர்கள் மீண்டும் தங்கள் கைவரிசையை காட்டி உள்ளனர்.
வேப்பூர் அருகே உள்ள வரம்பலூர் பகுதியை சேர்ந்தவர் ராஜா (வயது 35), விவசாயி. நேற்று இரவு வீட்டின் வெளியே கட்டிலில் படுத்து தூங்கினார். வீட்டுக்குள் புழுக்கமாக இருந்ததால் அவரது குடும்பத்தினர் கதவை திறந்து வைத்து விட்டு தூங்கி கொண்டிருந்தனர்.
நள்ளிரவில் சில மர்ம மனிதர்கள் அங்கு வந்தனர். ராஜா வீட்டிற்குள் நுழைந்தனர். அங்கிருந்த பீரோவை உடைத்து அதில் இருந்த 15 பவுன் தங்க நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்து விட்டு தப்பி சென்றனர். இதன் மதிப்பு ரூ.3 லட்சம் ஆகும்.
பின்னர் அதே பகுதியில் உள்ள விவசாயி அன்பழகன் வீட்டின் கதவை உடைத்து மர்ம மனிதர்கள் கொள்ளையடிக்க முயன்றனர். சத்தம் கேட்டு அவர் வெளியே ஓடிவந்தார். உடனே அந்த மர்ம மனிதர்கள் அங்கிருந்து ஓடினார்கள்.
ஊர் மக்கள் திரண்டு வந்து கொள்ளையர்களை துரத்தி சென்றனர். ஆனால், அவர்கள் தப்பி விட்டனர்.
இது குறித்து வேப்பூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
வேப்பூர் பகுதியில் தொடர்ந்து கொள்ளை சம்பவம் நடைபெற்று வருவதால் பொதுமக்கள் மத்தியில் பீதி ஏற்பட்டுள்ளது.
கடலூர் மாவட்டம் வேப்பூரை அடுத்த சேப்பாக்கத்தில் லாரி டிரைவரை கொன்று மர்ம மனிதர்கள் பணத்தை கொள்ளையடித்து சென்றனர்.
இந்த பரபரப்பு அடங்குவதற்குள் வேப்பூர் அருகே மர்ம மனிதர்கள் மீண்டும் தங்கள் கைவரிசையை காட்டி உள்ளனர்.
வேப்பூர் அருகே உள்ள வரம்பலூர் பகுதியை சேர்ந்தவர் ராஜா (வயது 35), விவசாயி. நேற்று இரவு வீட்டின் வெளியே கட்டிலில் படுத்து தூங்கினார். வீட்டுக்குள் புழுக்கமாக இருந்ததால் அவரது குடும்பத்தினர் கதவை திறந்து வைத்து விட்டு தூங்கி கொண்டிருந்தனர்.
நள்ளிரவில் சில மர்ம மனிதர்கள் அங்கு வந்தனர். ராஜா வீட்டிற்குள் நுழைந்தனர். அங்கிருந்த பீரோவை உடைத்து அதில் இருந்த 15 பவுன் தங்க நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்து விட்டு தப்பி சென்றனர். இதன் மதிப்பு ரூ.3 லட்சம் ஆகும்.
பின்னர் அதே பகுதியில் உள்ள விவசாயி அன்பழகன் வீட்டின் கதவை உடைத்து மர்ம மனிதர்கள் கொள்ளையடிக்க முயன்றனர். சத்தம் கேட்டு அவர் வெளியே ஓடிவந்தார். உடனே அந்த மர்ம மனிதர்கள் அங்கிருந்து ஓடினார்கள்.
ஊர் மக்கள் திரண்டு வந்து கொள்ளையர்களை துரத்தி சென்றனர். ஆனால், அவர்கள் தப்பி விட்டனர்.
இது குறித்து வேப்பூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
வேப்பூர் பகுதியில் தொடர்ந்து கொள்ளை சம்பவம் நடைபெற்று வருவதால் பொதுமக்கள் மத்தியில் பீதி ஏற்பட்டுள்ளது.