செய்திகள்

வாலிபர் கொலை வழக்கில் அண்ணன், தம்பி கைது

Published On 2016-05-28 22:40 IST   |   Update On 2016-05-28 22:40:00 IST
காளையார்கோவிலில் கடந்த 23-ந்தேதி மர்ம நபர்களால் வாலிபர் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் அண்ணன், தம்பி கைது செய்யப்பட்டனர்.
காளையார்கோவில்:

காளையார்கோவில் கிழக்கு ஒத்தவீடு பகுதியைச் சேர்ந்தவர் குட்டுலு என்ற கார்த்திக்(வயது26). இவர் கடந்த 23-ந்தேதி மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் குறித்து காளையார்கோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்தநிலையில் இந்த கொலையில்  சம்பந்தப்பட்ட காளையார்கோவில் அருகே உள்ள வளையம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த ஜான்சன் என்பவருடைய மகன் சார்லி(24). அவரது தம்பி பிரபாகரன்(21) ஆகிய 2 பேரை போலீசார் பிடித்தனர்.

அவர்கள் 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News