செய்திகள்

தாலுகா அளவில் முதல் இடம்: குட்வில் பள்ளி மாணவர்கள் சாதனை

Published On 2016-05-27 21:17 IST   |   Update On 2016-05-27 21:17:00 IST
எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. இதில், மானாமதுரை தாலுகா அளவில் குட்வில் மெட்ரிகுலேசன் பள்ளி மாணவ-மாணவிகள் முதலிடம் பெற்று சாதனை படைத்துள்ளனர்.
மானாமதுரை:

எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு முடிவுகள் நேற்றுமுன்தினம் வெளியிடப்பட்டன. இதில், மானாமதுரை தாலுகா அளவில் குட்வில் மெட்ரிகுலேசன் பள்ளி மாணவ-மாணவிகள் முதலிடம் பெற்று சாதனை படைத்துள்ளனர். இந்த பள்ளியைச் சேர்ந்த மாணவன் நவீன், மாணவி அம்ரிதா ஆகியோர் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் 500-க்கு 495 மதிப்பெண்கள் பெற்று தாலுகா அளவில் முதல் இடம் பிடித்துள்ளனர்.

இதேபோல் இந்த பள்ளியில் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு எழுதிய 28 மாணவர்கள் 450 மதிப்பெண்களுக்கு அதிகமாகவும், 49 மாணவர்கள் 400 மதிப்பெண்களுக்கு அதிகமாகவும் பெற்றுள்ளனர்.

பள்ளியின் 100 சதவிகித தேர்ச்சிக்கு உழைத்த ஆசிரியர்கள், சாதனை படைத்த மாணவர்கள் ஆகியோரை பள்ளி தாளாளர் பூமிநாதன் வாழ்த்தினார்.

Similar News