செய்திகள்

காஞ்சீபுரம் மாவட்டத்தில் மக்கள் குறை தீர்க்கும் கூட்டம்

Published On 2016-05-27 21:04 IST   |   Update On 2016-05-27 21:04:00 IST
காஞ்சீபுரம் மாவட்டத்தில் வருகிற 1-ந் தேதி முதல்அரசு விடுமுறை நாட்கள் மற்றும் வாரத்தின் முதல்நாள் திங்கட்கிழமை தவிர்த்து இதர நாட்களில் மக்கள் குறை தீர்க்கும் கூட்டம் நடைபெறுகிறது.
காஞ்சீபுரம்:

காஞ்சீபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து வருவாய் வட்டங்களிலும் வருவாய் துறை அலுவலர்களால் வருகிற 1-ந் தேதி முதல்அரசு விடுமுறை நாட்கள் மற்றும் வாரத்தின் முதல்நாள் திங்கட்கிழமை தவிர்த்து இதர நாட்களில்  மக்கள் குறை தீர்க்கும் கூட்டம் நடைபெறுகிறது.

மாவட்டத்தில் ஜமாபந்தி நடைபெறும் இடங்கள், மற்றும் நாட்கள் குறித்த விவரம் வருமாறு:-

வாலாஜாபாத் - 1-ந் தேதி முதல் 8-ந் தேதி வரை.

காஞ்சீபுரம்- 1-ந்  தேதி முதல் 14-ந்  தேதி வரை.

ஸ்ரீபெரும்புதூர்- 1ம் தேதி முதல் 14-ந்  தேதிவரை.

செங்கல்பட்டு - 1-ந்  தேதி முதல் 8-ந்  தேதிவரை.

ஆலந்தூர் - 1 மற்றும் 2-ந்  தேதி.

மதுராந்தகம் - 1-ந்  தேதிமுதல் 17-ந்  தேதி.

சோழிங்கநல்லூர் - 1 மற்றும் 2-ந்  தேதி.

பல்லாவரம் - 1-ந்  தேதி முதல் 3-ந்  தேதி வரை.

தாம்பரம் - 1 மற்றும் 2-ந் தேதி.

திருப்போரூர் - 1-ந்  தேதி முதல் 10-ந்  தேதிவரை.

திருக்கழுக்குன்றம் - 1-ந் தேதி முதல் 14-ந் தேதிவரை.

உத்திரமேரூர் - 1-ந்  தேதி முதல் 14-ந் தேதிவரை.

செய்யூர் - 1-ந்  தேதி முதல் 16-ந்  தேதிவரை.

இதில் பொதுமக்கள் பட்டா மாற்றுதல், மற்றும் இதர குறைகள் குறித்த மனுக்களை அளிக்கலாம்.

Similar News