செய்திகள்

நெல்லிக்குப்பம் போலீஸ் நிலையத்தில் காதல் ஜோடி தஞ்சம்

Published On 2016-05-27 17:20 IST   |   Update On 2016-05-27 17:20:00 IST
காதல் ஜோடிகள் நெல்லிக்குப்பம் போலீஸ் நிலையத்தில் தஞ்சம் புகுந்தனர்.
நெல்லிக்குப்பம்:

நெல்லிக்குப்பம் அருகே உள்ள திருக்கண்டேஸ்வரர் தோப்பு தெருவைச் சேர்ந்தவர் வடிவேலு. இவரது மகள் ரேவதி(வயது 18) 10–வகுப்பு வரை படித்து உள்ளார். இவருக்கும் அதே ஊரைச் சேர்ந்த ராஜேந்திரன் மகன் கோவிந்தராஜ் என்பவருக்கும் காதல் இருந்தது.

இருவரும் கடந்த 2 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில் சம்பவத்தன்று இருவரும் வீட்டை விட்டு வெளியேறினர். மகளை காணாததால் வடிவேலு நெல்லிக்குப்பம் போலீசில் புகார் செய்தார். போலீசார் தேடுவதை அறிந்த காதல் ஜோடி கோவிந்தராஜ்–ரேவதி பாதுகாப்பு கேட்டு நெல்லிக்குப்பம் போலீஸ் நிலையத்தில் தஞ்சம் புகுந்தனர்.

இதையடுத்து பெண்ணின் பெற்றோரை அழைத்து போலீசார் சமாதானம் செய்தனர். இதையடுத்து காதல் ஜோடிகளை பெற்றோருடன் அனுப்பி வைத்தனர்.

Similar News