செய்திகள்

கடலில் மூழ்கி மாணவன் பலி

Published On 2016-05-26 15:13 IST   |   Update On 2016-05-26 15:13:00 IST
நீலாங்கரை கடலில் குளித்த மாணவன் தண்ணீரில் மூழ்கி பலியானான்.

திருவான்மியூர்:

குரோம்பேட்டையை அடுத்த ஜமீன் பல்லாவரத்தை சேர்ந்தவர் சரவணன். இவரது மகன் விஜயபார்த்தீபன் (வயது 15). அதே பகுதியில் உள்ள பள்ளியில் 10–ம் வகுப்பு படித்து வந்தார். நேற்று மாலை நண்பர்கள் 9 பேருடன் நீலாங்கரை கடலில் குளித்தார்.

அப்போது விஜய் பார்த்தீபன் கடலில் மூழ்கினார். அவரை நண்பர்கள் காப்பாற்ற முடிய வில்லை. இன்று 2–வது நாளாக தேடும் பணி நடந்தது. இன்று காலை மெரீனா கடற்கரையில் விஜய பார்த்தீபன் பிணம் கரை ஒதுங்கியது.

Similar News