செய்திகள்
நீலாங்கரை கடலில் குளித்த மாணவன் தண்ணீரில் மூழ்கி பலியானான்.
திருவான்மியூர்:
குரோம்பேட்டையை அடுத்த ஜமீன் பல்லாவரத்தை சேர்ந்தவர் சரவணன். இவரது மகன் விஜயபார்த்தீபன் (வயது 15). அதே பகுதியில் உள்ள பள்ளியில் 10–ம் வகுப்பு படித்து வந்தார். நேற்று மாலை நண்பர்கள் 9 பேருடன் நீலாங்கரை கடலில் குளித்தார்.
அப்போது விஜய் பார்த்தீபன் கடலில் மூழ்கினார். அவரை நண்பர்கள் காப்பாற்ற முடிய வில்லை. இன்று 2–வது நாளாக தேடும் பணி நடந்தது. இன்று காலை மெரீனா கடற்கரையில் விஜய பார்த்தீபன் பிணம் கரை ஒதுங்கியது.