செய்திகள்

500–க்கு 498 மதிப்பெண்: தாம்பரம் மாணவி வைஷாலி 2–ம் இடம் பிடித்து சாதனை

Published On 2016-05-25 12:32 IST   |   Update On 2016-05-25 14:12:00 IST
கிழக்கு தாம்பரம் ஸ்ரீசங்கரா வித்யா மெட்ரிக் மேல் நிலைப்பள்ளி மாணவி வைஷாலி மாநில அளவில் 2–ம் இடம் பிடித்து சாதனை படைத்தார். அவர் 500–க்கும் 498 மதிப்பெண் எடுத்தார்.

காஞ்சீபுரம்:

கிழக்கு தாம்பரம் ஸ்ரீசங்கரா வித்யா மெட்ரிக் மேல் நிலைப்பள்ளி மாணவி வைஷாலி மாநில அளவில் 2–ம் இடம் பிடித்து சாதனை படைத்தார். அவர் 500–க்கும் 498 மதிப்பெண் எடுத்தார்.

மேலும் அவர் காஞ்சீபுரம் கல்வி மாவட்டத்தில் முதலிடம் பெற்றார்.

காஞ்சி மாவட்டத்தை சேர்ந்த 3 பேர் மாநில அளவில் 3–ம் இடம் பிடித்தனர். ஸ்ரீபெரும்புதூர் விவேகானந்தா மெரிக்பள்ளி மாணவர் கே.சூரிய மோகன், கொட்டிவாக்கம் செயிண்ட் அந்தோணி மெட்ரிக் பள்ளி மாணவி தமிழ் இலக்கியா, காஞ்சீபுரம் செவிலிமேடு சுவாமி விவேகானந்தா பள்ளி மாணவி உமா மகேஸ்வரி ஆகியோர் 497 மதிப்பெண் பெற்றார்.

இவர்கள் 3 பேரும் மாவட்ட அளவில் 2–ம் இடம் பிடித்து உள்ளனர்.

காஞ்சீபுரம் கல்வி மாவட்டத்தில் 496 மதிப்பெண் எடுத்து 3–வது இடத்தை 8 பேர் பிடித்தனர்.

மடிப்பாக்கம் பிரின்ஸ் மெட்ரிக் பள்ளி மாணவி ஆர்த்தி, மேடவாக்கம் ஜான் மெட்ரிக் பள்ளி மாணவர் அரவிந்த் பிரபு, காஞ்சீபுரம் ஒரிக்கை பாரதிதாசன் மெட்ரிக் பள்ளி மாணவி எழில்மதி, கீழ்க்கட்டளை ஹோலி மெட்ரிக் பள்ளி மாணவி ஜன்சி ஜெபமலர்.

மடிப்பாக்கம் பிரின்ஸ் மெட்ரிக் பள்ளி மாணவர் கிரிஷ் சீனிவாஸ், கூடுவாஞ்சேரி செயிண்ட் ஜான் மெட்ரிக் பள்ளி மாணவி மதுமிதா, குரோம்பேட்டை எஸ்.வி.எஸ்.வீ மெட்ரிக் பள்ளி மாணவி சாந்தி, மடிப்பாக்கம் சாய் மெட்ரிக் பள்ளி மாணவி வர்த்தினி ஆகிய 8 பேர் மாவட்ட அளவில் 3–ம் இடம் பிடித்தனர்.

காஞசீபுரம் மாவட்ட தேர்ச்சி சதவீதம் 92.77 ஆகும். கடந்த ஆண்டு 92.79 சதவீதமாக இருந்தது.

Similar News