செய்திகள்
சாத்தான்குளம் அருகே விவசாயி தற்கொலை
சாத்தான்குளம் அருகே மகன் குடிப்பழக்கத்தால் தந்தை தற்கொலை செய்து கொண்டார்.
சாத்தான்குளம்:
சாத்தான்குளம் அருகே உள்ள பூச்சிக்காட்டை சேர்ந்தவர் ராயப்பன் (வயது 65). விவசாயியான இவருக்கு மனைவி மற்றும் 3 மகன்கள் உள்ளனர். இதில் இளைய மகன் குமாருக்கு குடிப்பழக்கம் உள்ளது.
அவரிடம் குடிப்பழக்கத்தை விடுமாறு ராயப்பன் கூறிவந்தார். இதனால் அவர்களுக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இந்நிலையில் நேற்றும் குடிபோதையில் வந்த குமார், ராயப்பனுடன் வாக்குவாதம் செய்தாராம். இதனால் மன வேதனை அடைந்த ராயப்பன் வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இந்த சம்பவம் குறித்து தட்டார்மடம் போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) செல்வக்குமார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
சாத்தான்குளம் அருகே உள்ள பூச்சிக்காட்டை சேர்ந்தவர் ராயப்பன் (வயது 65). விவசாயியான இவருக்கு மனைவி மற்றும் 3 மகன்கள் உள்ளனர். இதில் இளைய மகன் குமாருக்கு குடிப்பழக்கம் உள்ளது.
அவரிடம் குடிப்பழக்கத்தை விடுமாறு ராயப்பன் கூறிவந்தார். இதனால் அவர்களுக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இந்நிலையில் நேற்றும் குடிபோதையில் வந்த குமார், ராயப்பனுடன் வாக்குவாதம் செய்தாராம். இதனால் மன வேதனை அடைந்த ராயப்பன் வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இந்த சம்பவம் குறித்து தட்டார்மடம் போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) செல்வக்குமார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.