அரசு ஆஸ்பத்திரியில் இருந்து தப்பி ஓடிய கொலை கைதி
தாம்பரம்:
சிட்லப்பாக்கம் பெரியார் தெருவை சேர்ந்தவர் வெங்கடேசன். மெக்கானிக் கடந்த மாதம் இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த ஆலப்பன் என்பவருக்கும் மொட்டை மாடியில் படுக்க இடம் பிடிப்பதில் தகராறு ஏற்பட்டது.
இருவரும் மாறி மாறி உருட்டுகட்டையால் தாக்கி கொண்டனர். படுகாயமடைந்த 2 பேரையும் அக்கம் பக்கத்தினர் மீட்டு குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ஆலப்பனை பரிசோதித்த டாக்டர்கள் அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து சிட்லப்பாக்கம் போலீசார் கொலை வழக்காக பதிவு செய்தனர்.
படுகாயமடைந்த வெங்கடேசனை மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
இந்த நிலையில் உடல்நிலை தேறிய வெங்கடேசன் நேற்று ஆஸ்பத்திரியில் இருந்து தப்பி ஓடிவிட்டார். இது குறித்து சிட்லப்பாக்கம் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.
வெங்கடேசனை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். தாம்பரம் பகுதியில் சுற்றி திரிந்த அவரை போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர்.