செய்திகள்
சீர்காழி அருகே பஸ் மோதி பா.ஜனதா வேட்பாளர் படுகாயம்
சீர்காழி அருகே காரைக்காலில் இருந்து புதுச்சேரி நோக்கி சென்ற புதுவை அரசு பஸ் மோதிய விபத்தில் பா.ஜனதா வேட்பாளர் காயம் அடைந்தார்
சீர்காழி :
சீர்காழி அருகே புத்தூர் மெயின் ரோட்டை சேர்ந்தவர் இளவழகன்(55). இவர் சீர்காழி தொகுதியில் பா.ஜனதா வேட்பாளராக போட்டியிடுகிறார்.
இவர் நேற்று மதியம் சீர்காழி அருகே புத்தூர் மெயின் ரோட்டில் பிரசார வாகனத்தில் வந்தபோது காரைக்காலில் இருந்து புதுச்சேரி நோக்கி சென்ற புதுவை அரசு பஸ் மோதியது.இதில் இளவழகன் மற்றும் வேனில் பயணம் செய்த தென்னலகுடி கிராமத்தைச் சேர்ந்த தர்மராஜ்(35) ஆகிய இருவரும் படுகாயம் அடைந்தனர். அவர்களை கட்சியினர் மீட்டு சீர்காழி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
இதுகுறித்து தகவல் கிடைத்ததும் மாவட்ட தலைவர் வெங்கடேசன், மாநில நிர்வாகி சின்னப்பண்ணை சீனிவாசன், மாவட்ட நிர்வாகிகள் குருமூர்த்தி, வெற்றிலை முருகன், அசோகன் உள்ளிட்ட ஏராளமானோர் மருத்துவமனை வளாகத்தில் குவிந்ததால் பரபரப்பு நிலவியது.
இதுகுறித்து கொள்ளிடம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சீர்காழி அருகே புத்தூர் மெயின் ரோட்டை சேர்ந்தவர் இளவழகன்(55). இவர் சீர்காழி தொகுதியில் பா.ஜனதா வேட்பாளராக போட்டியிடுகிறார்.
இவர் நேற்று மதியம் சீர்காழி அருகே புத்தூர் மெயின் ரோட்டில் பிரசார வாகனத்தில் வந்தபோது காரைக்காலில் இருந்து புதுச்சேரி நோக்கி சென்ற புதுவை அரசு பஸ் மோதியது.இதில் இளவழகன் மற்றும் வேனில் பயணம் செய்த தென்னலகுடி கிராமத்தைச் சேர்ந்த தர்மராஜ்(35) ஆகிய இருவரும் படுகாயம் அடைந்தனர். அவர்களை கட்சியினர் மீட்டு சீர்காழி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
இதுகுறித்து தகவல் கிடைத்ததும் மாவட்ட தலைவர் வெங்கடேசன், மாநில நிர்வாகி சின்னப்பண்ணை சீனிவாசன், மாவட்ட நிர்வாகிகள் குருமூர்த்தி, வெற்றிலை முருகன், அசோகன் உள்ளிட்ட ஏராளமானோர் மருத்துவமனை வளாகத்தில் குவிந்ததால் பரபரப்பு நிலவியது.
இதுகுறித்து கொள்ளிடம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.