செய்திகள்

சிவகங்கையில் வீட்டை அடித்து நொறுக்கி தாக்கியதில் தாய், மகள் காயம்: கணவன் உள்பட 8 பேருக்கு வலைவீச்சு

Published On 2016-05-08 20:20 IST   |   Update On 2016-05-08 20:20:00 IST
சிவகங்கையில் வீட்டை அடித்து நொறுக்கி தாக்கியதில் தாய், மகள் காயம் அடைந்துள்ளனர். தாக்குதலில் ஈடுபட்ட கணவன் உள்பட 8 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

சிவகங்கை:

சிவகங்கையில் உள்ள வல்லணி கிராமத்தை சேர்ந்தவர் செந்தில் முருகேசன் (வயது 32). இவரது மனைவி மகேஸ்வரி (27). இவர்களுக்கு 2 ஆண் குழந்தைகள் உள்ளன.

கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு கணவன்– மனைவிக்குள் தகராறு ஏற்பட்டதால் இருவரும் பிரிந்து வாழ்கிறார்கள்.

இந்த நிலையில் நேற்று செந்தில் முருகேசன் மற்றும் உறவினர்கள் வனரோஜா, ராஜா, முருகன், பாண்டி, மார்த்தாண்டன், நாகலட்சுமி, ராணி ஆகிய 8 பேரும் மகேஸ்வரி வசித்து வந்த வீட்டிற்கு சென்று அங்கிருந்த மகேஸ்வரியையும், இவரது தாயார் பஞ்சவர்ணத்தையும் தாக்கிவிட்டு வீட்டையும் அடித்து நொறுக்கியதாக தெரிகிறது. காயம் அடைந்த தாய், மகளை சிவகங்கை அரசு ஆஸ்பத்திரியில் அனு மதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

இதுகுறித்து மகேஸ்வரி சிவகங்கை நகர் போலீசில் புகார் செய்தார். சப்– இன்ஸ்பெக்டர் மகேஸ்வரி வழக்குப்பதிவு செய்து செந்தில்முருகேசன் உள்பட 8 பேரையும் தேடிவருகிறார்.

Similar News