செய்திகள்

இளையான்குடி அருகே பணம் நகையுடன் இளம்பெண் மாயம்

Published On 2016-05-08 19:17 IST   |   Update On 2016-05-08 19:17:00 IST
இளையான்குடி அருகே உறவினர் வீட்டில் தங்கி இருந்த இளம்பெண், பணம், நகையுடன் மாயமானார். அவரை போலீசார் தேடிவருகிறார்கள்.

சிவகங்கை:

இளையான்குடி அருகே உள்ள அதிகரை கிராமத்தை சேர்ந்தவர் ஜெயக்குமார் (வயது 36). இவரது உறவுக்கார பெண் சங்கீதா (வயது17) (பெயர் மாற்றப்பட்டுள்ளது). தாய் இறந்து விட்டதாலும், தந்தை வெளியூரில் வேலைபார்த்து வருவதாலும் ஜெயக்குமார் வீட்டில் சங்கீதா வசித்து வந்தார்.

இந்த நிலையில் கடந்த 21–ந்தேதியன்று வீட்டை விட்டு வெளியே சென்ற சங்கீதா வீடு திரும்பவில்லை. அவர் வீட்டை விட்டு வெளியே சென்றபோது ரூ.20 ஆயிரம் ரொக்கம், 6 பவுன் நகையை எடுத்து சென்றதாக கூறப்படுகிறது. அவரை பல இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை.

இது குறித்து இளையான்குடி போலீசில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் கண்ணதாசன் வழக்குப்பதிவு செய்து மாயமான சங்கீதாவை தேடிவருகிறார்.

Similar News