செய்திகள்
மோட்டார் சைக்கிளில் சென்ற கணவன்–மனைவியை வழிமறித்து நகை கொள்ளை
படூர் அருகே மோட்டார் சைக்கிளில் சென்ற கணவன்–மனைவியிடம் நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருப்போரூர்:
கேளம்பாக்கத்தை அடுத்த படூர் ராஜன் நகரில் வசித்து வருபவர் செந்தில் குமார். இவருடைய மனைவி மகேஸ்வரி. இவர்களுடைய மகள் ரஞ்சனா சோழிங்கநல்லூரில் சிலம்பாட்ட பயிற்சி வகுப்பில் சேர்ந்துள்ளார்.
பெற்றோர் இருவரும் அவரை தினமும் பயிற்சிக்கு கொண்டுபோய் விட்டு மீண்டும் வீட்டிற்கு அழைத்து வருவது வழக்கம். நேற்று இரவு பயிற்சி முடித்த மகளை இருவரும் மோட்டார் சைக்கிளில் அழைத்து வீட்டிற்கு வந்து கொண்டிருந்தனர்.
படூரில் உள்ள தனியார் கல்லூரி அருகே வந்த போது பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் அவர்களை மறித்து முகவரி கேட்டனர். திடீரென அவர்கள் மகேஸ்வரி கழுத்தில் அணிந்திருந்த 10 பவுன் செயினை பறித்துக் கொண்டு தப்பி ஓடிவிட்டனர்.
இதேபோல், திருத்தணி சின்னத்துரை சேர்ந்தவர் பரந்தாமன் (55) விவசாயி. இவர் தனது அக்கா தெய்வநாயகி, மற்றும் மகளுடன் கூட்டு குடும்பமாக வசித்து வருகிறார்.
நேற்று இரவு காற்றுக்காக கதவை திறந்து வைத்து விட்டு தூங்கினர். இதை அறிந்த மர்ம நபர்கள் நேற்று இரவு 2 மணி அளவில் பரந்தாமனின் வீட்டிற்குள் சென்று பீரோவை திறந்து அதில் இருந்த 7½ பவுன் நகை, ½ கிலோ வெள்ளி பொருட்கள், ரூ.10 ஆயிரம் மற்றும் 3 செல்போன்களை கொள்ளையடித்தனர். பின்னர் வீட்டிற்குள் தூங்கிய பரந்தாமனின் பேத்தி யுவஸ்ரீயின் காலில் கிடந்த கொலுசை கழற்ற முயன்றனர்.
அப்போது தண்ணீர் குடிக்க தெய்வநாயகி வீட்டிற்குள் வந்தார். மர்ம நபர்கள் யுவஸ்ரீ கொலுசை கழற்றுவதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். உடனே திருடன் திருடன் என கத்தினார். அதற்குள் மர்ம நபர்கள் வீட்டின் பின்பக்க வாசல் வழியாக தப்பி சென்றனர்.
இதுகுறித்து கனகம்மா சத்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள். மேலும் கொள்ளை போன பொருட்களின் மதிப்பு ரூ.2½ லட்சமாகும்.
கேளம்பாக்கத்தை அடுத்த படூர் ராஜன் நகரில் வசித்து வருபவர் செந்தில் குமார். இவருடைய மனைவி மகேஸ்வரி. இவர்களுடைய மகள் ரஞ்சனா சோழிங்கநல்லூரில் சிலம்பாட்ட பயிற்சி வகுப்பில் சேர்ந்துள்ளார்.
பெற்றோர் இருவரும் அவரை தினமும் பயிற்சிக்கு கொண்டுபோய் விட்டு மீண்டும் வீட்டிற்கு அழைத்து வருவது வழக்கம். நேற்று இரவு பயிற்சி முடித்த மகளை இருவரும் மோட்டார் சைக்கிளில் அழைத்து வீட்டிற்கு வந்து கொண்டிருந்தனர்.
படூரில் உள்ள தனியார் கல்லூரி அருகே வந்த போது பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் அவர்களை மறித்து முகவரி கேட்டனர். திடீரென அவர்கள் மகேஸ்வரி கழுத்தில் அணிந்திருந்த 10 பவுன் செயினை பறித்துக் கொண்டு தப்பி ஓடிவிட்டனர்.
இதேபோல், திருத்தணி சின்னத்துரை சேர்ந்தவர் பரந்தாமன் (55) விவசாயி. இவர் தனது அக்கா தெய்வநாயகி, மற்றும் மகளுடன் கூட்டு குடும்பமாக வசித்து வருகிறார்.
நேற்று இரவு காற்றுக்காக கதவை திறந்து வைத்து விட்டு தூங்கினர். இதை அறிந்த மர்ம நபர்கள் நேற்று இரவு 2 மணி அளவில் பரந்தாமனின் வீட்டிற்குள் சென்று பீரோவை திறந்து அதில் இருந்த 7½ பவுன் நகை, ½ கிலோ வெள்ளி பொருட்கள், ரூ.10 ஆயிரம் மற்றும் 3 செல்போன்களை கொள்ளையடித்தனர். பின்னர் வீட்டிற்குள் தூங்கிய பரந்தாமனின் பேத்தி யுவஸ்ரீயின் காலில் கிடந்த கொலுசை கழற்ற முயன்றனர்.
அப்போது தண்ணீர் குடிக்க தெய்வநாயகி வீட்டிற்குள் வந்தார். மர்ம நபர்கள் யுவஸ்ரீ கொலுசை கழற்றுவதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். உடனே திருடன் திருடன் என கத்தினார். அதற்குள் மர்ம நபர்கள் வீட்டின் பின்பக்க வாசல் வழியாக தப்பி சென்றனர்.
இதுகுறித்து கனகம்மா சத்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள். மேலும் கொள்ளை போன பொருட்களின் மதிப்பு ரூ.2½ லட்சமாகும்.