செய்திகள்

தேவகோட்டை அருகே கண்டதேவி குளத்தில் மூழ்கி என்ஜினீயர் மாணவர் சாவு

Published On 2016-05-01 20:22 IST   |   Update On 2016-05-01 20:22:00 IST
தேவகோட்டை அருகே கண்டதேவி குளத்தில் மூழ்கி என்ஜினீயர் மாணவர் பலியானார்.

தேவகோட்டை:

ராமேசுவரத்தை சேர்ந்தவர் அமலராஜ். இவரது மகன் நியூமேன் (வயது 21). இவர் சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகே உள்ள ஒரு தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் 2–ம் ஆண்டு படித்து வந்தார்.

இந்நிலையில் நேற்று விடுமுறை என்பதால் நியூமேன் தனது நண்பர்கள் பாலமுருகன், பாண்டிய ராஜ் ஆகியோருடன் தேவகோட்டை அருகே உள்ள கண்டதேவி குளத்தில் குளிக்க சென்றார்.

3 பேரும் குளித்துக் கொண்டிருந்தபோது ஆழமான பகுதியில் நியூமேன் சிக்கினார். அவரால் நீச்சல் அடித்து வர முடியவில்லை. இதனால் தண்ணீரில் மூழ்கி நியூமேன் பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்த ஆராவயல் போலீசார் தேவகோட்டை தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு வந்து சுமார் 3 மணி நேரம் குளத்தில் தேடுதல் பணியில் ஈடுபட்டு நியூமேன் உடலை மீட்டனர். இந்த சம்பவம் குறித்து ஆராவயல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Similar News