செய்திகள்

மனைவி வரதட்சணை புகார்: கணவர் கைது

Published On 2016-04-25 15:30 IST   |   Update On 2016-04-25 15:29:00 IST
சேலத்தில் வரதட்சணை கேட்டு கொடுமை படுத்துவதாக கணவர் மீது மனைவி புகார் கொடுத்துள்ளார்.

கொண்டலாம்பட்டி:

சேலம் சங்கர் நகர் வித்ய ஆஸ்ரமம் ரோடு பகுதியை சேர்ந்தவர் ஜெயசீலன் (வயது 33). இவரது மனைவி வனிதா(வயது 28). இவர் சேலம் அம்மாப்பேட்டை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில், தனது கணவர் ஜெயசீலன் வரதட்சணை கேட்டு கொடுமை படுத்துவதாக புகார் கொடுத்தார்.

அதன் பேரில் இன்ஸ்பெக்டர் சுலேகா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில் கடந்த 2013–ம் ஆண்டு பிப்ரவரி மாதம் கோவையை சேர்ந்த பட்டதாரி பெண் வனிதாவை ஜெயசீலன் திருமணம் செய்து கொண்டார். அப்போது வனிதா குடும்பத்தினரிடம் இருந்து சுமார் 3½ லட்சம் பணம் வரதட்சணையாக பெற்றுள்ளார்.

இந்த நிலையில், மேலும் வனிதாவிடம் வரதட்சணை கேட்டுள்ளதும், இதனால் மனம் உடைந்த வனிதா போலீசில் புகார் செய்துள்ளதும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் ஜெயசீலனை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.

Similar News