செய்திகள்
தூத்துக்குடியில் மின்சாரம் தாக்கி கேபிள் டி.வி. ஆபரேட்டர் பலி
தூத்துக்குடியில் மின்சாரம் தாக்கி கேபிள் டி.வி. ஆபரேட்டர் பலி போலீசார் விசாரணை
தூத்துக்குடி:
தூத்துக்குடி சக்திவிநாயகர்புரத்தை சேர்ந்தவர் குரூஸ்லின் (வயது 34). இவர் கேபிள் டி.வி. ஆபரேட்டர். குரூஸ்லின் அப்பகுதியில் புது வீடு கட்டி வந்தார். சம்பவத்தன்று கட்டிடத்தை தண்ணீரால் நனைத்துக் கொண்டிருந்தார்.
அப்போது அந்த வழியாக சென்ற மின் கம்பி மீது அவரது கைபட்டது. இதில் குரூஸ்லின் உடலில் மின்சாரம் பாய்ந்து அவர் தூக்கி வீசப்பட்டார். இதில் படுகாயம் அடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி குரூஸ்லின் இறந்தார். இந்த சம்பவம் குறித்து தூத்துக்குடி வடபாகம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.