உள்ளூர் செய்திகள்

கோத்தகிரி அருகே தூக்குப்போட்டு 2 வாலிபர்கள் தற்கொலை

Published On 2023-03-15 09:12 GMT   |   Update On 2023-03-15 09:12 GMT
  • கவுதம் கோத்தகிரி பகுதியில் கூலி வேலை செய்து வருகிறார்.
  • வீட்டின் சமையல் அறையில் டி.வி. கேபிள் ஒயரால் தூக்குப்போட்டு பிணமாக தொங்கினார்.

கோத்தகிரி,

கோத்தகிரி பகுதிக்கு உட்பட்ட கார்சிலி பகுதியில் வசித்து வருபவர் ராபர்ட். இவரும் இவரது மனைவியும் குடும்ப பிரச்சினை காரணமாக பிரிந்து வாழ்கின்றனர். இவர்களது மகன் கவுதம் கோத்தகிரி பகுதியில் கூலி வேலை செய்து வருகிறார்.

சம்பவத்தன்று ராபர்ட் வேலைக்கு சென்று விட்டு வீடு திரும்பினார். அப்போது கவுதம் வீட்டின் சமையல் அறையில் டி.வி. கேபிள் ஒயரால் தூக்குப்போட்டு பிணமாக தொங்கினார்.

அதிர்ச்சியடைந்த ராபர்ட் அக்கம் பக்கத்தினரிடம் கூறினார். பின்பு அவர்கள் கோத்தகிரி போலீசாருக்கு தகவல் அளித்தனர்.

தகவலின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை கைப்பற்றி கோத்தகிரி அரசு ஆஸ்பத்தரிக்கு அனுப்பி வைத்தனர். கவுதம் எதனால் தற்கொலை செய்து கொண்டார் என்பது பற்றி போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

கோத்தகிரி கெர்பேட்டா எஸ்டேட் பகுதியில் வசித்து வருபவர் செல்வராஜ். இவரது மகன் ஸ்ரீனிவாசன் (22). இவர் வழக்கம் போல் வேலைக்கு சென்று விட்டு வீடு திரும்பினார். இரவு வீட்டில் உள்ள அனைவரிடமும் சகஜமாக பேசிவிட்டு தூங்க சென்றுள்ளார்.

காலை 5 மணிக்கு செல்வராஜ் வேலைக்கு புறப்பட எழுந்தார். அப்போது வீட்டின் ஒரு அறையில் ஸ்ரீனிவாசன் தூக்கில் தொங்கியபடி பிணமாக தொங்கினார். அவர் தற்கொலை செய்து கொண்டது ஏன் என்று தெரியவில்லை. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News