உள்ளூர் செய்திகள்

சென்னை விமான நிலையத்தில் போதிய பயணிகள் இல்லாததால் 2 இலங்கை விமானங்கள் ரத்து

Published On 2023-10-17 08:45 GMT   |   Update On 2023-10-17 08:45 GMT
  • விமானத்தில் பயணம்செய்ய மிகவும் குறைவான பயணிகளே முன்பதிவு செய்து இருந்தனர்.
  • செல்ல முன்பதிவு செய்து இருந்த பயணிகளுக்கு மாற்று ஏற்பாடு செய்யப்பட்டது

ஆலந்தூர்:

இலங்கையில் உள்ள கொழும்பு நகரில் இருந்து இன்று அதிகாலை 2:10 மணிக்கு சென்னை விமான நிலையத்துக்கு ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் வரவேண்டும். இதேபோல் அந்த விமானம் சென்னை விமான நிலையத்தில் இருந்து அதிகாலை 3:10 மணிக்கு மீண்டும் இலங்கை புறப்பட்டு செல்லும்.

இந்த நிலையில் விமானத்தில் பயணம் செய்ய போதுமான பயணிகள் இல்லாததால் இந்த 2 விமானங்களின் சேவையும் இன்று ரத்து செய்யப்பட்டன.

இந்த விமானத்தில் பயணம்செய்ய மிகவும் குறைவான பயணிகளே முன்பதிவு செய்து இருந்தனர். இதைத்தொடர்ந்து அந்த பயணிகள் வேறு விமானங்களில் பயணம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டு டிக்கெட்டுகள் மாற்றிக் கொடுக்கப்பட்டன.

இதுகுறித்து விமான நிலைய அதிகாரிகள் கூறும்போது, போதிய பயணிகள் இல்லாததால் 2 இலங்கை விமானங்கள் ரத்து செய்யப்பட்டு உள்ளன. அதில் செல்ல முன்பதிவு செய்து இருந்த பயணிகளுக்கு மாற்று ஏற்பாடு செய்யப்பட்டது என்றனர்.

Tags:    

Similar News