உள்ளூர் செய்திகள்

விவசாயி கொல்லப்பட்ட சம்பவத்தில் 2 உறவினர்கள் கைது

Published On 2023-01-27 15:07 IST   |   Update On 2023-01-27 15:07:00 IST
  • கிருஷ்ணப்பா கத்தியால் குத்திக்கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தார்.
  • கொலை தொடர்பாக அவருடைய உறவினர்களான அப்பையா, கோபால் நாயுடு ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

சூளகிரி,

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே பேரிகை ராமச்சந்திரம் கிராமத்தை சேர்ந்தவர் கிருஷ்ணப்பா (வயது 52). விவசாயி.

இவருக்கு திருமணமாகி மனைவி, ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். இந்த நிலையில் நேற்று ராமசந்திரம் பகுதியில் உள்ள உறவினர் நிலத்தில் கிருஷ்ணப்பா கத்தியால் குத்திக்கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தார்.

இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அந்த வழியாக சென்றவர்கள் உடனடியாக பேரிகை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

அதன்பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற ேபாலீசார் கொலை செய்யப்பட்டு கிடந்த கிருஷ்ணப்பாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஓசூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

கிருஷ்ணப்பாவின் உடலில் 5 இடங்களில் கத்தியால் குத்தப்பட்ட காயங்கள் இருந்தன. இதுகுறித்து பேரிகை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கி உள்ளனர்.

கிருஷ்ணப்பாவிற்கு யாருடனும் முன்விரோதம் இருந்ததா? தொழில் போட்டி இருந்ததா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் இந்த கொலை தொடர்பாக அவருடைய உறவினர்களான அப்பையா, கோபால் நாயுடு ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

Tags:    

Similar News