உள்ளூர் செய்திகள்
- விசாரணையில் அவரது பெயர் மகேஷ் (29), குருபராத்பள்ளியை சேர்ந்தவர் என தெரிய வந்தது. அவரை போலீசார் கைது செய்தனர்.
- அதில் அவர் 110 கிராம் கஞ்சா வைத்திருந்தது தெரிய வந்தது.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கஞ்சா விற்பனை நடைபெறுகிறதா? என போலீசார் கண்காணித்தனர். அந்த வகையில் குருபராத்பள்ளி அருகில் சூளகிரி போலீசார் ரோந்து சென்றனர். அப்போது அவ்வழியாக வந்த நபரை சோதனை செய்த போது 10 கிராம் கஞ்சா வைத்திருந்தது தெரிய வந்தது.
விசாரணையில் அவரது பெயர் மகேஷ் (29), குருபராத்பள்ளியை சேர்ந்தவர் என தெரிய வந்தது. அவரை போலீசார் கைது செய்தனர்.
ஓசூர் மது வலக்கு அமல் பிரிவு போலீசார் அஞ்செட்டி அருகே கொடகரை பகுதியில் ரோந்து சென்றனர். அவ்வழியாக வந்த வாலிபரை சோதனை செய்தனர். அதில் அவர் 110 கிராம் கஞ்சா வைத்திருந்தது தெரிய வந்தது.
விசாரணையில் அவரது பெயர் முகமது பிலால (21), தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே உள்ள கும்மனூரை சேர்ந்தவர் என தெரிய வந்தது. அவரை போலீசார் கைது செய்தனர்.