உள்ளூர் செய்திகள்

கோப்பு படம்

தேனி அருகே வாலிபரை வெட்டி கொல்ல முயன்ற 2 பேருக்கு 7 ஆண்டு சிறை

Published On 2023-09-05 05:00 GMT   |   Update On 2023-09-05 05:00 GMT
  • காதல் தகராறில் வாலிபரை வெட்டி கொல்ல முயன்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
  • இந்த வழக்கில் 2 பேருக்கும் 7 ஆண்டு ஆண்டு சிறை தண்டனை அளிக்கப்பட்டது.

தேனி:

தேனி மாவட்டம் போடி திருமலாபுரத்ைத சேர்ந்தவர் சுருளிராஜ். இவர் கடந்த 17.10.2013ம் தேதி சைக்கிளில் சென்று கொண்டிருந்த போது அணைக்கரை ப்பட்டியை சேர்ந்த கார்த்திக் (வயது23), என்பவர் தான் காதலித்த பெண்ணை வேறு ஒருவருக்கு திருமணம் செய்து வைத்ததாக கூறி அவரிடம் தகராறு செய்தார். அப்போது சர்ச் தெருவை சேர்ந்த சுகுமார் (20) மற்றும் சுஜாதா (43) ஆகியோரும் அவரை தாக்கி உள்ளனர்.

மேலும் கத்தியால் குத்தி கொலை செய்ய முயன்றனர். படுகாயம் அடைந்த சுருளிராஜ் போடி டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இதனைத் தொடர்ந்து போலீசார் கார்த்திக் மற்றும் சுகுமாரை கைது செய்தனர்.

இந்தவழக்கு தேனி மாவட்ட தலைமை நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி சுரேஷ் கொலை முயற்சியில் ஈடுபட்ட கார்த்திக் மற்றும் சுகுமாருக்கு தலா 7 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.1000 அபராதமும் விதித்தார்.

அபராதத்தை கட்ட தவறினால் மேலும் ஒரு மாதம் சிறை தண்டனை அனுகவிக்க நேரிடும் எனவும் தெரிவித்தார். இவ்வழக்கில் அரசு வக்கீலாக விவேகானந்தன், புலன் விசாரணை மேற்கொண்ட போடி இன்ஸ்பெக்டர்கள் பாலகுரு, புவனேஸ்வரி, சப்-இன்ஸ்பெக்டர் முருகன் ஆகியோருக்கு எஸ்.பி. பாராட்டு தெரிவித்தார்.

Tags:    

Similar News