உள்ளூர் செய்திகள்

பகண்டை கூட்டு ரோடு அருகே மதுபாட்டில் விற்ற 2 பேர் கைது

Published On 2023-09-03 07:07 GMT   |   Update On 2023-09-03 07:07 GMT
  • பகண்டை கூட்டு ரோடு அருகே மதுபாட்டில் விற்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
  • அவர்களிடமிருந்து 7 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

கள்ளக்குறிச்சி:

கள்ளக்குறிச்சி மாவட்டம் வாணபுரம் தாலுக்கா பகண்டை கூட்டுரோடு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பிரபாகரன் தலைமையில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடு பட்டுக் கொண்டிருந்தனர். அப்போது இளையனார்குப்ப த்தை சேர்ந்த கணேஷ் மகன் வெங்கடேசன்(வயது38) என்பவர் தனது வீட்டின் அருகே மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்து கொண்டிருந்தார். அவரை ேபாலீசார் கைது செய்தனர். இதே போன்று சின்னக்கொள்ளியூரை சேர்ந்த முனுசாமி(58) என்பவர் தனது வீட்டின் அருகே மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்து கொண்டிருந்தார். அவரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து 7 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

Tags:    

Similar News